இளையராஜாவுக்கு பணத்தின் மீது பேராசை... தயாரிப்பாளர் கே.ராஜன் பரபரப்பு பேச்சு!

தயாரிப்பாளர் ராஜன்
தயாரிப்பாளர் ராஜன்

இசையமைத்த தனக்கே பாடல்கள் மீது முழு உரிமை உள்ளது என இளையராஜா காப்புரிமை தொடர்பாக வழக்கு ஒன்றை நடத்தி வருகிறார். இது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகி இருக்கும் நிலையில், “தயாரிப்பாளருக்குத்தான் இசை தொடர்பான உரிமை உண்டு” என தயாரிப்பாளர் கே. ராஜன் பேசியிருக்கிறார்.

கஜேந்திரா இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் ’குற்றம் தவிர்’. ’அட்டு’ படப் புகழ் ரிஷி ரித்விக் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன் கலந்து கொண்டார். அப்போது படக்குழுவினரை வாழ்த்திப் பேசிய அவர், இளையராஜாவின் பாடல்கள் உரிமை சர்ச்சை பற்றியும் பேசத் தவறவில்லை.

’குற்றம் தவிர்’ தொடக்க விழாவில்
’குற்றம் தவிர்’ தொடக்க விழாவில்

இந்த நிகழ்வில் பேசிய ராஜன், "ஒரு படத்தின் பாடல்களின் உரிமை தயாரிப்பாளருக்கே சொந்தம். ஏனென்றால் கதையை நாங்கள் தேர்ந்தெடுத்து, இயக்குநருடன் பேசி, கதாநாயகனுடன் பேசி, பிறகு இசையமைப்பாளருடன் பேசுகிறோம். இயக்குநர் கதைக்கேற்ற சூழலைச் சொல்லி அதற்கு ஏற்ற மெட்டை இசையமைப்பாளரிடம் இயக்குநர் தான் வாங்குகிறார்.

இயக்குநர் சொல்லும் வேலையைத்தான் இசையமைப்பாளர் செய்ய வேண்டும். இசையமைப்பாளர் தன்னிச்சையாக தன் இஷ்டத்திற்கு எதுவும் செய்ய முடியாது.10 ட்யூன் வாங்குவோம் சில நேரம் 25 ட்யூன் கூட வாங்கித் தேர்ந்தெடுப்போம்” என்றார்.

மேலும் பேசிய அவர், “கொத்தனார் வீடு கட்டுகிறார். அந்த கொத்தனார் தினசரி கட்டிடம் கட்டுகிறார் அவருக்குக் கூலி கொடுத்து விடுகிறோம். கட்டிட வேலைகள் எல்லாம் முடிந்து கிரகப்பிரவேசம் செய்யும் போது, ’அந்தக் கட்டிடம் எனக்குத் தான் சொந்தம் ,நான்தான் கட்டினேன்’ என்று கொத்தனார் சொன்னால் எப்படி முட்டாள்தனமாக இருக்குமோ அதைப்போல எங்கள் இசை இசையமைப்பாளருக்குத் தான் சொந்தம் என்று சொல்வதும்.

’குற்றம் தவிர்’ தொடக்க விழாவில்
’குற்றம் தவிர்’ தொடக்க விழாவில்

நாங்கள் அதற்குரிய சம்பளத்தைக் கொடுத்து விட்டோம். இன்று அது வழக்கில் இருக்கிறது எங்களுக்கு சாதகமாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தயாரிப்பாளர்களுக்குத் தான் பாட்டும் இசையும் சொந்தம். அவர் ஒரு பெரிய இசைஞானி அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், பேராசையின் காரணமாக பணத்தின் மீது அளவுக்கு அதிகமாக ஆசைப்படுகிறார்.

அவர் செய்வது சரியில்லை. பாடலைப் பாடுபவர்கள், வாத்தியங்கள் வாசிப்பவர்கள், வரிகள் எழுதுபவர்கள் இவர்களுக்கெல்லாம் பாடல் சொந்தம் இல்லை. தயாரிப்பாளருக்குத் தான் பாடல்கள் அத்தனையும் சொந்தம்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

ஜாக்கிரதை... இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்!

தேனியில் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது... பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு!

மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை... தாய் உள்ளிட்ட மூவர் கைது!

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்... சிறுமி பலி.. 30 பேர் படுகாயம்!

கேரள ராணுவ அதிகாரியின் மகன் பெங்களூருவில் கடத்தல்... பணத்திற்காக நண்பர்கள் போட்ட பிளான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in