Ameer- Karthi Controversy: பன்றிக் கணக்கையே பத்துவிதமாக எழுதி பணம் ஏமாற்றியவர் அமீர்... தயாரிப்பாளர் விளாசல்!

அமீர்
அமீர்

’பருத்திவீரன்’ படத்தில் அமீர்-கார்த்திக்கு இடையில் என்ன பிரச்சினை நடந்தது, அமீர் எப்படி பணத்தை மோசடி செய்தார் என அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.

நடிகர் கார்த்தி ‘பருத்திவீரன்’ படத்தில் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே நடிகர் கார்த்திக்கு அசத்தலான அறிமுகமாக இந்தப் படம் அமைந்தது. இந்த நிலையில், சமீபத்தில் ‘கார்த்தி 25’ விழா நடந்தது. இதில் நடிகர் கார்த்தி திரைத்துறையில் தனது நண்பர்கள் அனைவரையும் அழைத்திருந்தார். ஆனால், தன்னை திரையில் அறிமுகப்படுத்திய இயக்குநர் அமீரை அவர் அழைக்கவில்லை. ஏற்கெனவே, இயக்குநர் அமீருக்கும் சூர்யா குடும்பத்திற்கும் மனக்கசப்பு என சொல்லப்பட்ட நிலையில் இது இது மேலும் ஊர்ஜிதமானது

அமீர்- கார்த்தி
அமீர்- கார்த்தி

தனது சமீபத்திய பேட்டிகளில் ‘பருத்திவீரன்’ படத்தில் பணம்தான் தனக்குப் பிரச்சினை எனவும் தயாரிப்புத் தரப்பான ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா மீதும், கார்த்தி மீதும் புகார் வாசித்திருந்தார் இயக்குநர் அமீர்.

இதுகுறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேட்டி ஒன்றில், “ஒரு படம் கமிட் செய்துவிட்டால் நான் இயக்குநர்களை முழுமையாக நம்புவேன். 2 கோடி 75 லட்சத்தில் ஆரம்பித்த படம் இது. இதற்கான கணக்கை தயாரிப்பாளர் கவுன்சிலில் கேட்டார்கள். ’பருத்தி வீரன்’ ஃபிளாஷ்பேக்கில் 35 பன்றிகள் தெரியும். ஆனால், அமீர் கணக்குக் காட்டியதோ 250 பன்றிகள். அதில் ஹைட் பிக்ஸ், டைட் பிக்ஸ் (Hide Pigs-Died Pigs) என்று வேறு கணக்கு காட்டினார். இப்படி பன்றிக் கணக்கையே பத்துவிதமாக எழுதி ஏமாற்றியவர் அவர்.

 ஞானவேல்
ஞானவேல்

அமீர் புத்திசாலி. அவர் ஒழுங்காக இருந்திருந்தால் இந்நேரத்திற்கு ஹாலிவுட்டில் படம் செய்யப் போயிருப்பார். ஆனால், அவர் உழைத்துச் சம்பாதிக்க வேண்டும் என்றில்லாமல் யாராவது மாட்டினால் உள்ளுக்குள்ளேயே திருட வேண்டும் என்ற எண்ணம் வைத்திருக்கிறார். அப்போது தயாரிப்பாளராக எனக்கும் புதிய படம். அதே அமீர் இப்போது என்னிடம் வந்தால் அவரை நான் டீல் செய்யும் விதமே வேறு. என்னிடம் மட்டும் அவர் திருடவில்லை. ஆர்யாவை வைத்து எடுக்கப்பட்ட ‘சந்தனத்தேவன்’ படத் தயாரிப்பாளரிடமும் நன்றாகத் திருடினார். இதை என்னால் நிரூபிக்க முடியும்” எனக் கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

சேலையில் ஒய்யாரமாய் வலம் வரும் பிரபல நடிகை

உஷார்... சிக்கன் பிரியாணியால் சுயநினைவை இழந்த 3 பேர்!

மணி ரத்னத்தால வாழ்க்கையே போச்சு.. நாசம் பண்ணிட்டார்... பொதுவெளியில் புலம்பிய பிரபலம்!

கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்த 2ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

புகார் கொடுக்க வந்த சிறுமியை சீரழித்த உதவி ஆய்வாளர் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in