'லியோ' ரிலீஸின் போது வன்முறையில் ஈடுபட்டால்... நடிகர் விஜய் ரசிகர்களுக்கு எச்சரிக்கை!

'லியோ' படத்தில் விஜய்
'லியோ' படத்தில் விஜய்

'லியோ' திரைப்படம் திரையரங்குகளில் திரையிடுவது தொடர்பாக, தமிழக அரசு இன்று சில கட்டுப்பாடுகளுடன் அரசாணை பிறப்பித்துள்ளது.

'லியோ' படத்தில் விஜய்
'லியோ' படத்தில் விஜய்

நடிகர் விஜய் நடித்த 'லியோ' படம் வரும் 19-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் 'லியோ' திரைப்படம் திரையிடுவது தொடர்பாக, தமிழக வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறும் திரையரங்குகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

'லியோ' திரைப்படம் திரையரங்குகளில் திரையிடுவது தொடர்பாக, தமிழக அரசு இன்று சில கட்டுப்பாடுகளுடன் அரசாணை பிறப்பித்துள்ளது.

அதில் வரும் 19 முதல் 24-ம் தேதி வரை திரையரங்குகளில் சிறப்பு காட்சி உட்பட தினசரி 5 காட்சிகள் 'லியோ' படத்தை திரையிட வேண்டும், காலை 9.00 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 01.30 மணிக்குள் 5 காட்சிகளை முடிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.

மேலும், 'லியோ' திரைப்படத்தை திரையிடும் திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்படம் காண வரும் பொதுமக்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் போக்குவரத்து சீராக செல்ல ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அதிக கட்டணத்துக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யக்கூடாது என கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

மேலும் இதனைக் கண்காணிக்க சிறப்புக்குழுக்கள் அமைத்து சென்னை காவல் ஆணையர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களும் கண்காணிக்க வேண்டுமென அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்
காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்

அதன் பேரில் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், 19.10.2023 முதல் 24.10.203 வரையில் 'லியோ' திரைப்படம் திரையிடப்படும் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அரசு வகுத்துள்ள கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்க வேண்டும், திரையரங்கிற்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடங்கள் சிறந்த முறையில் அமைத்திட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

மேலும், அரசு அனுமதி அளித்துள்ளது போல் காலை 09.00 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 01.30 மணிக்குள் திரைப்படத்தை முடித்துக் கொள்ள வேண்டும், அதிக கட்டணத்துக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதற்காக, சென்னை காவல்துறையில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறி செயல்படும் திரையரங்குகள், அதன் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், திரையரங்குகளில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in