சிறுவயதில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தன்னுடைய பெற்றோர் தன்னிடம் கேட்காமல் கூட வீட்டை விட்டு உறவினர்களுடன் அனுப்பினார்கள் என பஞ்சாப்பை சேர்ந்த பிரபல நடிகரும், பாடகருமான தில்ஜித் டோசன்ஜ் சமீபத்திய பேட்டியில் மனமுடைந்து பேசியுள்ளார். இதனால், பெற்றோரிடம் இருந்து தான் விலகியே இருந்ததாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப்பை சேர்ந்த பிரபல நடிகர், பாடகர் தில்ஜித் டோசன்ஜ். பாலிவுட்டில் ’சூர்மா’, ‘க்ரூ’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தன்னுடைய சமீபத்தியப் பேட்டி ஒன்றில் சிறுவயதில் தன்னுடைய பெற்றோரே தன்னை வீட்டை விட்டு அனுப்பிய சம்பவத்தை மன வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பேட்டியில்,“அப்போது எனக்கு 11 வயதிருக்கும். லூதியானாவில் உள்ள உறவினருடன் அதாவது என் மாமாவுடன் எனது அடிப்படைத் தேவைகளைக் கவனித்துக் கொள்வதற்காக பெற்றோரால் அனுப்பப்பட்டேன். இந்த முடிவைப் பற்றி என் பெற்றோர் என்னிடம் கருத்து கேட்கவே இல்லை. என் பெற்றோர் மீது அதிக மதிப்பு வைத்திருந்தேன்.
கிராமத்தில் இருந்து நகரத்திற்கு என்னை அனுப்பினார்கள். அங்கு சிறிய அறை ஒன்றில் தங்கினேன். தினமும் பள்ளிக்குப் போய் விட்டு வீடு திரும்புவது மட்டுமே என் வேலை. வேறு எங்கும் வெளியே போவது வருவது கிடையாது.
அங்கு தொலைக்காட்சியோ, நண்பர்களோ எனக்கு இல்லை. தொலைபேசியும் அப்போது அரிதுதான். என் பெற்றோரிடம் பேச வேண்டும் என்றாலோ அல்லது அவர்கள் என்னிடம் பேச வேண்டும் என்றாலோ கட்டணம் என்பதால் அந்த வாய்ப்பும் இல்லாமல் போனது.
என் அப்பா மீது பெரிய மதிப்பு வைத்திருந்தேன். அம்மா, மிகவும் இனிமையானவர். என் குடும்பத்திடம் இருந்து அந்த வயதில் மொத்தமாக பிரிந்து விட்டேன். அப்படியான என் குடும்ப சூழலையும் என் பால்யத்தையும் நினைத்துப் பார்த்தால் மனம் வலிக்கிறது” என அந்தப் பேட்டியில் உருக்கமாகப் பேசியிருக்கிறார்.
இதையும் வாசிக்கலாமே...
ஓசூரில் பரபரப்பு... வாகன தணிக்கையில் ரூ.15 கோடி மதிப்பிலான நகைகள் சிக்கியது!
குண்டு கட்டாகத் தூக்கிச் சென்று வேலூர் இப்ராஹிம் கைது... அனுமதியின்றி பிரசாரம் செய்ததால் அதிரடி!
பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு வழக்கு... என்ஐஏ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!