நான்கு பேரால் அக்கா, தங்கை கூட்டுப் பலாத்காரம்... காதலர்களைக் கட்டிப்போட்டு விடிய, விடிய நடந்த கொடூரம்!

திண்டுக்கல்
திண்டுக்கல்

காதலர்கள் கண் முன்னே அவர்களின் காதலிகளான சகோதரிகள் இருவர் இளைஞர்களால் கொடூரமாக பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதியின்  19 வயதான மூத்த மகள் திருமணமான நிலையில்  அவர் கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். அந்த பெண்ணுக்கும், வேறொரு வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வருகின்றனர். இதேபோல் அந்த பெண்ணின் 17 வயது தங்கையும் ஒருவரை காதலித்து வருகிறார்.

இந்தநிலையில் 2 இளம்பெண்களும், தங்களது காதலர்களுடன் கடந்த 30-ந்தேதி இடையக்கோட்டை அருகே நடந்த கோயில் திருவிழாவை பார்க்கச் சென்றனர். திருவிழா முடிந்ததும் நள்ளிரவு 1 மணி அளவில் திண்டுக்கல்லுக்கு வந்தனர். அங்கிருந்து தங்களது ஊருக்குச் செல்வதற்கு அவர்கள் நான்கு பேரும் திண்டுக்கல் மின்வாரிய தலைமை அலுவலகம் அருகே பழநி புறவழிச் சாலையில் பேருந்துக்காக காத்திருந்தனர்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வந்த  மூன்று இளைஞர்கள்,   திடீரென்று கத்தியைக் காட்டி மிரட்டி, நான்கு பேரையும் தங்களுடன் இருசக்கர வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். உயிருக்குப் பயந்து அவர்களுடன் சென்றவர்களை  திண்டுக்கல் அருகே தாமரைக்குளத்தில் உள்ள மைலாப்பூர் என்ற குளத்துக்கு அந்த இளைஞர்கள்  அழைத்து சென்றனர். அங்கு காத்திருந்த மற்றொரு இளைஞருடன் சேர்ந்து கொண்டனர்.  

நான்கு பேரும் சேர்ந்து இளம்பெண்களுடன் வந்த அவர்களின் காதலர்களைக் கட்டிப் போட்டனர். பின்னர் அவர்கள் நான்கு  பேரும் சகோதரிகள் இருவரையும் கூட்டுப் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்து காதலர்கள் கதறினர். விடிய, விடிய இளம்பெண்களுக்கு கொடூரம் தொடர்ந்த நிலையில் அந்த வாலிபர்கள் விடியற்காலை அங்கிருந்து இருசக்கர வாகனங்களை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட இரண்டு இளம்பெண்களும்,  தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இளம்பெண்கள் கூறிய அடையாளத்தை வைத்து, கொடூர செயலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து  தீவிர விசாரணையில் ஈடுபட்ட போலீஸார் அந்த நபர்கள் குறித்து அடையாளம் கண்டனர்.

திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த சரண்குமார்(21), முத்தழகுபட்டியை சேர்ந்த வினோத்குமார் (26), முருகபவனத்தை சேர்ந்த சூர்யபிகாஷ் (22),  தாமரைக்குளத்தை சேர்ந்த சுள்ளான் என்ற பிரசன்னகுமார் ஆகிய 4 பேர் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களில் சரண்குமார், வினோத்குமார், சூர்யபிரகாஷ், ஆகிய மூன்று பேரையும்  போலீஸார்  நேற்று கைது செய்தனர். 

பிரசன்னகுமார் தலைமறைவாகி விட்டார். அவர் மீது திண்டுக்கல், தாடிக்கொம்பு, வேடசந்தூர் போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர். காதலர்கள் கண்முன்பு அவர்களின் காதலிகளான சகோதரிகள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட   சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in