யாஷிகா ஆனந்த்
யாஷிகா ஆனந்த்

கார் விபத்தில் தோழி மரணம்... நடிகை யாஷிகா ஆனந்த் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்!

நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்காக யாஷிகா ஆனந்த் நேரில் இன்று நேரில் அங்கு ஆஜரானார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடிகை யாஷிகா ஆனந்த் ஓட்டி வந்த கார் மாமல்லபுரம் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவருடன் பயணித்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பவானி செட்டி என்பவர் உயிரிழந்தார். இவர் யாஷிகாவின் உயிர் தோழி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் யாஷிகாவும் பலத்த காயமடைந்தார். மதுபோதையில் காரை அதிவேகமாக ஓட்டியதில் இந்த விபத்து நடந்ததாகவும் அப்போது செய்திகள் வெளியாகின.

அந்த விபத்தில் இருந்தும் தோழியின் இழப்பில் இருந்தும் மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கிறார் யாஷிகா. தோழி குறித்து அவ்வப்போது பதிவு பகிர்ந்து உருகவும் தவறுவதில்லை யாஷிகா. இந்த விபத்து குறித்தான வழக்கு செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், மகிளா நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்காக இன்று, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் யாஷிகா ஆனந்த் ஆஜரானார்.

விபத்தில் இருந்து உடல்நலன் தேறியுள்ள யாஷிகா பழையபடி சமூகவலைதளப் பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவது, படங்களில் நடிப்பது என பிஸியாக உள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


+2க்கு பின்... பிசினஸ், காமர்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங்... படிப்புகளுக்கு என்ன வாய்ப்பு?

பச்சைப் பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்... விண்ணதிர ஒலித்த 'கோவிந்தா' முழக்கம்!

“விஜயதாரணி ஆசைப்படலை... பேராசைப்பட்டார்...” ஹசீனா சையத் விளாசல்!

நள்ளிரவில் மாட்டுவண்டி பயணம்... 300 ஆண்டு பாரம்பரிய நிகழ்ச்சியில் பக்தர்கள் பரவசம்!

பெரும் சோகம்... காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 குழந்தைகள் உள்பட 22 பேர் பலி!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in