நடிகை சித்தி இத்னானி ஷீரடியில் சாய் பாபாவை தரிசனம் செய்துள்ளார். இந்தப் புகைப்படங்களை அவர் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
படப்பிடிப்பு முடித்து சின்ன பிரேக் கிடைத்தாலும் வெளிநாட்டு சுற்றுலா அல்லது ஆன்மிக சுற்றுலா செல்வதுதான் பிரபலங்களின் வழக்கமாக உள்ளது. அங்கிருந்து அவர்கள் பகிரும் புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கிறது. அப்படித்தான் நடிகை சித்தி இத்னானி ஷீரடி சாய்பாபாவை தரிசனம் செய்யச் சென்றுள்ளார். நடிகர் சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படம் மூலமாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர்தான் சித்தி இத்னானி.
அதன் பிறகு ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திலும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இப்போது ஷீரடிக்கு ஆன்மிகப் பயணம் சென்றுள்ளார் சித்தி. தனது தோழிகளுடன் தெருக்களில் களைகட்டும் கொண்டாட்டம், உணவு விடுதி என அங்கு எடுத்துள்ள அனைத்துப் புகைப்படங்களையும் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இங்கு போய் வந்த வீடியோக்களைத் தனது யூடியூப் பக்கத்திலும் பகிரப் போவதாக் கூறியுள்ளார் சித்தி.
இதையும் வாசிக்கலாமே...
ரஜினி மகளை உசுப்பேற்றும் ரசிகர்கள்... ஐஸ்வர்யாவுக்கு தனி கொடி அறிமுகப்படுத்தி அலப்பறை!
அதிர்ச்சி... நேரலையில் சிவசேனா பிரமுகரை சுட்டுக்கொன்றுவிட்டு, கொலையாளியும் தற்கொலை!
ஒலிம்பிக் மெடலுடன் ஈபிள் டவர் பகுதியை எடுத்து செல்லலாம்... பிரான்ஸ் அசத்தல் அறிவிப்பு!
பகீர் வீடியோ... தியேட்டருக்குள் தீவைத்து கொண்டாடிய ரசிகர்கள்!
மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்... கால்களை பறிகொடுத்த இளைஞர்!