நடிகர் சிம்புவின் ஐம்பதாவது படத்தை சுதா கொங்கரா இயக்க இருப்பதாக வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் சிம்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு சுதா படத்தில் கவனம் செலுத்த உள்ளார் சிம்பு.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தனக்கான இடத்தைப் பிடித்தவர் சிம்பு. இடையில் காதல் சர்ச்சை, உடல் எடை கூடியது என கரியரில் பின் தங்கினாலும் இப்போது இரண்டாவது இன்னிங்கிஸில் கதைத் தேர்வில் மிக கவனமாக இருக்கிறார். இப்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், கமல் தயாரிப்பில் தன்னுடைய 48-வது படத்திற்காகத் தயாராகி வருகிறார் சிம்பு.
படம் அறிவித்து ஒரு வருடங்கள் கடந்தாலும் இன்னும் படப்பிடிப்புத் தொடங்காமல் இருக்கிறது. இதனால், படம் டிராப் ஆகிவிட்டதோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழ, அதெல்லாம் இல்லை என மறுத்தது படக்குழு. இந்தப் படம் முடிந்ததும் ‘ஓ மை கடவுளே’ பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார் சிம்பு.
எந்தவொரு நடிகருக்கும் ஐம்பதாவது படம் ரொம்பவே ஸ்பெஷல். தன்னுடைய படத்தையும் அப்படி ஸ்பெஷலாக்க இயக்குநர் சுதா கொங்கராவிடம் பேசியிருக்கிறாராம் சிம்பு. அவர் சொன்ன கதை சிம்புவுக்குப் பிடித்துவிடவே உடனே டபுள் ஓகே சொல்லி இருக்கிறார். சூர்யாவை வைத்து சுதா கொங்கரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்திற்காக அவர் தேசிய விருது வென்றார்.
இப்போது ‘புறநானூறு’ படத்திற்குத் தயாராகி வரும் சுதா, அந்தப் பணிகளை முடித்துவிட்டு சிம்பு படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகளையும் தொடங்குவார் எனச் சொல்லப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
ஊடகங்கள், வலைதளங்களிலும்கூட பிரச்சாரம் செய்யக்கூடாது... மீறினால் சிறை!
தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கட்டாய விடுமுறை... பெங்களூரு ஐ.டி நிறுவனங்களுக்கு உத்தரவு!
மின்சாரக் கார்களுக்கு என்னாச்சு... 14 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் டெஸ்லா!