நடிகர் ரஜினிகாந்த் தனது இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
’வேட்டையன்’ படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் ரிலாக்ஸ் செய்வதற்காக அபுதாபி சென்றார். அபுதாபியில் இருந்து சென்னை திரும்பியவர் அடுத்த நாளே இமயமலைக்கு ஒருவார காலம் ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கினார். அங்கிருந்து வெளியான அவரது புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.
ஹரித்துவார், பாபாஜி குகை எனத் தனது ஆன்மிகப் பயணத்தை முடித்துவிட்டு இன்று அவர் சென்னை திரும்பியுள்ளார்.
தேர்தல் முடிவுகளுக்கு முன்பு இமயமலை கிளம்பினார் ரஜினி. அரசியல் குறித்த கேள்விகள் எழுப்பிய போது, ‘அண்ணா, நோ பாலிடிக்ஸ்’ என்றார். இப்போது முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு சென்னை திரும்பியிருக்கிறார் ரஜினிகாந்த். ஜூன் 10ம் தேதி தொடங்க இருக்கும் ‘கூலி’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.
இதையும் வாசிக்கலாமே...
தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி: ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்யும் நரேந்திர மோடி!
ஜெகன் மோகன் ரெட்டி சாதனையை முறியடித்த ரகுவீர் ரெட்டி... தேர்தல் திருவிழா சுவாரசியம்!
நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் டெபாசிட் காலி... சீமான் அதிர்ச்சி!
தூத்துக்குடியில் கனிமொழி சாதனை... எதிர்த்து போட்டியிட்ட 27 பேரின் டெபாசிட் காலி!
எக்சிட் ஃபோல் இப்படியாகி போச்சோ... கணித்துக் கொடுத்தவர் கண்ணீர் விட்டுக் கதறிய வீடியோ வைரல்!