ஜெகன் மோகன் ரெட்டி சாதனையை முறியடித்த ரகுவீர் ரெட்டி... தேர்தல் திருவிழா சுவாரசியம்!

நல்கொண்டாவில் வெற்றி பெற்ற ரகுவீர் ரெட்டி.
நல்கொண்டாவில் வெற்றி பெற்ற ரகுவீர் ரெட்டி.

கடப்பா தொகுதியில் 2011-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் 5,43 லட்சம் அதிக வாக்குகளைப் பெற்ற ஜெகன் மோகன் ரெட்டியின் சாதனையை காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ரகுவீர் ரெட்டி தற்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் முறியடித்துள்ளார்.

இந்திய முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்து நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் சில வேட்பாளர்கள் சத்தமில்லாமல் பல சாதனைகளைச் செய்துள்ளனர்.

சங்கர் லால்வானி
சங்கர் லால்வானி

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பாஜக தலைவர் சங்கர் லால்வானி 10 லட்சத்து 8 ஆயிரத்து 77 வாக்குகள் அதிகம் பெற்றார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இநத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காந்திராம் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.

இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் களத்தில் இல்லாததால், காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் நோட்டாவுக்கு வாக்களித்தனர். இதனால் நோட்டாவுக்கு இரண்டு லட்சத்து 18 ஆயிரத்து 676 வாக்குகள் பதிவாகின. அதிக வாக்குகள் ஒரு சாதனை என்றால், நோட்டா வாக்குகள் அதிகம் பதிவானதும் சாதனையாக மத்தியப்பிரதேச மாநிலத்தில் பதிவாகியுள்ளது.

அசாம் மாநிலத்தின் துப்ரி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரகிபுல் ஹுசைன் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார். அவர் 10 லட்சத்து 12 ஆயிரத்து 476 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

ரகிபுல் ஹுசைன்
ரகிபுல் ஹுசைன்

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவர் பதுருதீன் அஜ்மலை எதிர்த்து அவர் இந்த அளவில் வெற்றி பெற்றார் என்பது சிறப்பம்சமாகும்.

ம.பி.,யில் 5வது முறையாக முதல்வராக பொறுப்பேற்பாரா சிவராஜ் சிங் சவுகான்?
ம.பி.,யில் 5வது முறையாக முதல்வராக பொறுப்பேற்பாரா சிவராஜ் சிங் சவுகான்?

மத்தியப் பிரதேச மக்களால் மாமாஜி என்று அழைக்கப்படும் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் செளகானின் செல்வாக்கு சிறிதும் குறையவில்லை என்பதை இந்த தேர்தல் நிரூபித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து போட்டியிட்ட அவர், 8 லட்சத்து 21 ஆயிரத்து 408 வாக்குகள் வித்தியாசத்தில் விதிஷா தொகுதியில் மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

குஜராத் பாஜக தலைவர் சிஆர் பாட்டீல் வெற்றியும் ஒரு சாதனைதான். குஜராத்தில் இருந்து நவ்சாரி தொகுதியில் போட்டியிட்ட சி.ஆர்.பாட்டீல், 7 லட்சத்து 73 ஆயிரத்து 551 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அமித் ஷா
அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா காந்திநகரில் போட்டியிட்டார். அவர் 7 லட்சத்து 44 ஆயிரத்து 716 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தேர்தல் பிரசாரத்தின் போது நாடு முழுவதும் அவர் பிரச்சாரம் செய்தாலும், தனது தொகுதிக்கு அதிக நேரம் ஒதுக்கவில்லை. இருப்பினும், காந்திநகர் மக்கள் அவருக்கு அதிக அளவு வாக்களித்துள்ளனர்.

வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும், டிஎம்சி தேசிய பொதுச்செயலாளருமான அபிஷேக் பானர்ஜி அமோக வெற்றி பெற்றுள்ளார். டைமண்ட் ஹார்பரில் போட்டியிட்ட அபிஷேக் பானர்ஜி 7 லட்சத்து 10 ஆயிரத்து 930 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அபிஷேக் பானர்ஜி
அபிஷேக் பானர்ஜி

தெலுங்கானா மாநிலத்திலும் தேர்தலில் புதிய சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜனா ரெட்டியின் மகன் ரகுவீர் ரெட்டி நல்கொண்டாவில் 5 லட்சத்து 59 ஆயிரத்து 906 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். காங்கிரசின் கோட்டையான நல்கொண்டாவில் அவருக்கு இந்த அளவிற்கு வாக்குகுள் கிடைத்துள்ளது.

ரகுவீர் ரெட்டி
ரகுவீர் ரெட்டி

இதுவரை தெலுங்கானா மாநிலத்தில் 2011-ம் ஆண்டு கடப்பா மக்களவை இடைத்தேர்தலில் ஜெகன் மோகன் 5.43 லட்சம் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருந்தார். அந்த சாதனையை நல்கொண்டா தொகுதியில் போட்டியிட்ட ரகுவீர் ரெட்டி தற்போது முறியடித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in