இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து நட்சத்திர வீரர் ரபேல் நடால் விலகியதன் காரணமாக இந்திய வீரர் சுமித் நாகலுக்கு இத்தொடரில் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்துள்ளது.
22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான ஸ்பெயினை சேர்ந்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால் காயம் காரணமாக இந்த ஆண்டு நடைபெற உள்ள இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
ஏறக்குறைய ஓராண்டுக்குப் பின் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற பிரிஸ்பேன் டென்னிஸ் தொடரில் பங்கேற்றார் நடால். ஆனால் அந்த தொடரின்போது ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து விலகினார். அப்போது அவருக்கு ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. இதன் காரணத்தால், அவர் இந்தியன் வெல்ஸ் ஓபனில் இருந்தும் விலகியுள்ளார்.
நடால் விலகியதன் காரணமாக இந்திய வீரர் சுமித் நாகல் அந்த தொடரில் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
#BREAKING: நடிகர் அஜித்குமார் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!
அதிர்ச்சி... பாகிஸ்தானை விட மோசம்... இந்தியாவில் 67,00,000 குழந்தைகள் பட்டினியால் அவதி!
ஆட்சிக்கு ஆபத்தா?! கலங்கும் உடன்பிறப்புகள்... தஞ்சை பெரியகோயில் அகழியில் பயங்கர தீ விபத்து!
அடுத்த அதிர்ச்சி...17 வயது மாணவியை கடத்திச் சென்று 3 பேர் கூட்டுப் பலாத்காரம்!