கும்பகோணத்தில் 17 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீஸாருடன் குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பழைய பாலக்கரை உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 17 வயது சிறுமிக்கு இன்று திருமணம் நடக்கவிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார், தாலி கட்டுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக திருமண மண்டபத்திற்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
அப்போது போலீஸாருடன் இருவீட்டாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மணப்பெண் வீட்டாரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், பெண்ணிற்கு 18 வயது பூர்த்தியாக இன்னும் மூன்று மாதங்கள் இருப்பதை ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து சிறுமி மற்றும் அவரது குடும்பத்தார் மற்றும் மணமகன் குடும்பத்தினரை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். சிறுமிக்கு 18 வயது பூர்த்தி ஆவதற்கு முன்பாக மீண்டும் திருமண ஏற்பாடு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சிறுமியின் பெற்றோர் மற்றும் மணமகன் வீட்டாரிடம் கைப்பட எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.
18 வயது பூர்த்தியாகாத நிலையில் பெண்ணுக்கு திருமண ஏற்பாடு செய்திருப்பதை அறிந்த இரு வீட்டார் உறவினர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். திருமணம் நின்றாலும் திருமண மண்டபத்தில் டிஜே மியூசிக் மற்றும் ஆடல் பாடல் கொண்டாட்டம் நடைபெற்றது. உறவினர்கள் உணவு சாப்பிட்டு மொய் வைத்து விட்டு சென்றனர். கடைசி நேரத்தில் திருமணம் நின்றதால், இருவீட்டாரும் கவலை அடைந்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
135 கி.மீ. வேகம்... கரையை கடக்கும் போது சூறையாடிய 'ரெமல்' புயல்: மேற்கு வங்கத்தில் தொடரும் கனமழை!
முதல் முறையாக 50 டிகிரி செல்சியஸ் வெப்பம்... ராஜஸ்தான் மக்கள் அதிர்ச்சி!
திருப்பதி அருகே பயங்கர விபத்து... சாலைத் தடுப்பில் கார் மோதி 4 பேர் பலி!
சோகம்... சரத்குமார் நடித்த 'மாயி' பட இயக்குநர் மாரடைப்பால் மரணம்!
இடைக்கால ஜாமீனை 7 நாள்கள் நீட்டிக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் கேஜ்ரிவால் மனு