பலாத்கார குற்றவாளியின் வீடு இடிப்பு
பலாத்கார குற்றவாளியின் வீடு இடிப்பு 
க்ரைம்

பெண்ணை பலாத்காரம் செய்தவரின் வீட்டை இடித்து தரைமட்டம்... ம.பி. அரசின் துணிச்சல் நடவடிக்கை!

காமதேனு

மத்தியப் பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர நபரின் வீட்டை அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர்.

மத்திய பிரதேச மாநிலம், குணா மாவட்டத்தில் அயன் கான் என்ற இளைஞருடன் 23 வயது பெண் ஒருவர் பழகியுள்ளார். இந்நிலையில் 10 நாட்களுக்கு முன்பு, அந்தப் பெண்ணை தனது வீட்டில் அடைத்து வைத்து அயன் கான் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், அவரை பெல்ட்டால் அடித்து துன்புறுத்தியதோடு, அந்தப் பெண்ணின் கண்ணில் பசையை தடவி அட்டூழியம் செய்துள்ளார்.

பெண் பலாத்காரம்

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கடந்த வாரம் புதன்கிழமை போலீஸில் புகார் அளித்தார். இந்நிலையில், அதற்கு மறுநாளே போலீஸார் அயன் கானை கைது செய்தனர். மேலும், அவரது இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த 60 லிட்டர் சாராயத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே, அயன் கான் வீடு, சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்து கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு அவருக்கு நோட்டீஸ் வழங்கினர். அதைத் தொடர்ந்து மேல் நடவடிக்கையாக நேற்று அதிகாரிகள் அவரது வீட்டை இடித்து தரைமட்டமாக்கினர்.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குணாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக குவாலியர் அனுப்பப்பட்டார். பலாத்கார குற்றவாளியின் வீட்டை இடித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்ட சம்பவத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

சித்ரா பௌர்ணமி கோலாகலம்... திருவண்ணாமலையில் 5000 போலீஸார் பாதுகாப்பு... 2500 சிறப்பு பேருந்துகள்!

மீனாட்சி சுந்தரேஸ்வரருடன் புறப்பட்டது தேர்... மக்கள் வெள்ளத்தில் திணறும் மாமதுரை!

குட் நியூஸ்... மருத்துவக் காப்பீட்டில் மகத்தான மாற்றம்... வயது வரம்பு நீக்கம்!

இந்தியா கூட்டணி கூட்டத்தில் ரகளை... ராஷ்டிரிய ஜனதாதளம் - காங்கிரஸ் கடும் மோதல்!

நேரடி வரி வசூல் 19,58,000 கோடி ரூபாய்... கடந்த நிதியாண்டில் வரி வசூலில் சாதனை!

SCROLL FOR NEXT