பயிற்சி மருத்துவர் சரனிதா 
க்ரைம்

லேப்டாப்பிற்கு சார்ஜ் போடும்போது விபரீதம்: மின்சாரம் தாக்கி பெண் பயிற்சி மருத்துவர் உயிரிழப்பு!

காமதேனு

சென்னையில் லேப்டாப்பிற்கு சார்ஜ் ஏற்றும் போது பெண் பயிற்சி மருத்துவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

கீழ் வேளூரைச் சேர்ந்தவர் சரனிதா (32). இவர் கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் மருத்துவர் சரனிதா எம்டி முடித்து விட்டு, ஒரு மாத பயிற்சிக்காக சென்னை வந்துள்ளார். இங்கு அயனாவரத்தில் தங்கி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்தார்.

லேப்டாப் சார்ஜிங்

இந்நிலையில் சரனிதாவை இன்று காலை அவரது கணவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் நீண்டநேரமாக அவர் போனை எடுக்கவில்லை.

இதையடுத்து சரனிதாவின் கணவர், அவர் தங்கியிருந்த விடுதி நிர்வாகத்துக்கு போன் செய்து அவரது அறைக்கு சென்று பார்க்குமாறு தெரிவித்துள்ளார்.

அப்போது விடுதி நிர்வாகத்தினர் அங்கு சென்று பார்த்தபோது, மருத்துவர் சரனிதா, லேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி, இறந்து கிடந்தது தெரியவந்தது.

உயிரிழப்பு

மேலும், சார்ஜ் ஒயரை கையில் பிடித்தவாறே அவர் இறந்து கிடந்தது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

135 கி.மீ. வேகம்... கரையை கடக்கும் போது சூறையாடிய 'ரெமல்' புயல்: மேற்கு வங்கத்தில் தொடரும் கனமழை!

முதல் முறையாக 50 டிகிரி செல்சியஸ் வெப்பம்... ராஜஸ்தான் மக்கள் அதிர்ச்சி!

திருப்பதி அருகே பயங்கர விபத்து... சாலைத் தடுப்பில் கார் மோதி 4 பேர் பலி!

சோகம்... சரத்குமார் நடித்த 'மாயி' பட இயக்குநர் மாரடைப்பால் மரணம்!

இடைக்கால ஜாமீனை 7 நாள்கள் நீட்டிக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் கேஜ்ரிவால் மனு

SCROLL FOR NEXT