சினிமா

46 வயதில் இரண்டாவது குழந்தை... ஆதங்கத்தை வெளிப்படுத்திய நடிகை ராணி முகர்ஜி!

காமதேனு

"எனக்கு இப்போது 46 வயதாகிறது. இந்த வயதில் நான் இரண்டாவது குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியுமா? ஆனால், என் முதல் குழந்தைக்கு சகோதரர்கள் யாரும் இல்லையே என்ற வருத்தம் இருக்கதான் செய்கிறது” என நடிகை ராணி முகர்ஜி பேசியுள்ளார்.

கணவருடன் ராணி முகர்ஜி...

பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி தனது இரண்டாவது குழந்தைக்கு கடந்த ஏழு வருடமாக முயற்சி செய்ததையும் ஆனால், அது பலனளிக்கவில்லை என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமீபத்திய பேட்டியில் பேசியிருப்பதாவது, “கடினமான விஷயம்தான். முதல் குழந்தை ஆதிரா பிறந்தபிறகு கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் இரண்டாவது குழந்தைக்காக முயற்சி செய்தோம். ஒருமுறை கர்ப்பமும் ஆனேன். ஆனால், அது கலைந்துவிட்டது. அந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவர எனக்கு சில காலம் ஏற்பட்டது.

நான் பார்ப்பதற்கு இளமையாகத் தோன்றலாம். ஆனால், உண்மையில் அப்படியில்லை. எனக்கு இப்போது 46 வயதாகிறது. இந்த வயதில் நான் குழந்தைப் பெற்றுக் கொள்வதில் உடல்ரீதியாக சிக்கல் இருக்கிறது. என் குழந்தைக்கு உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை என்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது” என்றார்.

மேலும் அவர் பேசியிருப்பதாவது, “இருந்தாலும் எங்களுக்கு என்ன கிடைத்ததோ அதை வைத்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டோம்” என்றார்.

நடிகை ராணி முகர்ஜிக்கும் இயக்குநர் ஆதித்யா சோப்ராவுக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அதன் பிறகு 2015ல் அவர்களுக்கு பெண் குழந்தைப் பிறந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

அர்விந்த் கேஜ்ரிவாலால் மிகவும் வருத்தப்படுகிறேன்.... மனம் திறந்தார் குருநாதர் அன்னா ஹசாரே!

நடிகை மகாலட்சுமிக்கு நள்ளிரவில் சர்ப்ரைஸ் கொடுத்த ரவீந்தர்!

நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்... தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு!

தயாநிதி மாறனை எதிர்த்து பிரேமலதா போட்டி?: பரபரப்பில் மத்திய சென்னை தேர்தல் களம்!

போதை ஊசியால் இளைஞர் உயிரிழப்பு... சென்னையில் தொடரும் சோகம்!

SCROLL FOR NEXT