சூர்யா, சுதா கொங்கரா, துல்கர் சல்மான்
சூர்யா, சுதா கொங்கரா, துல்கர் சல்மான்  
சினிமா

சூர்யாவின் ’புறநானூறு’ அப்டேட்... இன்னும் அவகாசம் தேவை என்கிறது படக்குழு!

காமதேனு

’புறநானூறு’ படப்பிடிப்புக்கு முந்தைய பணிகளுக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக, நடிகர் சூர்யாவும், இயக்குநர் சுதா கொங்கராவும் கூட்டாக அறிக்கை வெளியிட்டு படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளனர்.

'இறுதிச் சுற்று' படத்திற்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 'சூரரைப் போற்று' திரைப்படம், கடந்த 2020-ம் ஆண்டு வெளியானது. எளிய பின்னணியை சேர்ந்த நாயகன், குறைந்த கட்டணத்தில் விமானத்தை இயக்கும் கதையை மிகவும் விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியது அப்படம். வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் அந்தப் படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று தேசிய விருதையும் வென்றது. இதையடுத்து இரண்டாவது முறையாக சூர்யாவும், சுதா கொங்கராவும் இணைவதாக கடந்தாண்டு அக்டோடர் மாதம் அறிவிக்கப்பட்டது.

சூர்யா - சுதா கொங்கரா

’புறநானூறு’ என்று படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டது. சமூக பிரச்சினை சார்ந்த படமாக இருக்கும் என்று படத்தின் அறிமுக வீடியோவும் உணர்த்தியது. படத்தில் சூர்யாவுடன் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா உள்ளிட்டோர் நடிப்பதாகவும், ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைப்பதாகவும் அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகின. ஆனால், படப்பிடிப்பு தொடங்குவதில் இழுபறி நீடித்து வந்தது. இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால், அப்டேட் கேட்டு வந்தனர்.

அறிக்கை

இந்நிலையில், சூர்யாவும், இயக்குநர் சுதா கொங்கராவும் இணைந்து ஒரு அறிக்கை மூலம் படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், ' ‘புறநானூறு’ படப்பிடிப்புக்கான முன் தயாரிப்பு பணிகளுக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது. இப்படத்தில் நாங்கள் இணைந்து பணியாற்றுவது சிறப்பு வாய்ந்தது. இந்த கூட்டணி இதயத்திற்கு மிகவும் நெருக்கமானதும் கூட. எங்களது சிறந்த படைப்பை உங்களுக்கு கொடுப்பதற்காக பணியாற்றி வருகிறோம். விரைவில் அடுத்தகட்ட பணிகளும், படப்பிடிப்பும் தொடங்கும். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் சுதா கொங்கரா எப்போதும் திரைக்கதை உருவாக்கத்தில் அதிக அவகாசத்தையும், சிரத்தையும் எடுத்துக் கொள்வது வழக்கம். முழு திரைக்கதை மற்றும் வசனம் தயாரான பிறகு ஸ்கிரிப்ட் ரீடிங், ஆக்டிங் ஓர்க் ஷாப் உள்ளிட்ட பணிகளை முடித்த பிறகே படப்பிடிப்புக்கு செல்வது அவரது பாணி. அவரது முந்தைய இரண்டு படங்களும் வெற்றி பெற்றதற்கு அதுவே காரணம்.

‘சூரறைப் போற்று’ படம் பெரிய ஹிட் அடித்ததால், சூர்யாவும், சுதா கொங்கராவும் இணையும் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் திரைக்கதையை மெருகேற்றுவதற்காகவே இந்த கூடுதல் அவகாசம் என்று கூறப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...


ஷாக்... நடுக்கடலில் விழுந்து நொறுங்கிய இந்திய கடற்படை விமானம்!

விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை... பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

நள்ளிரவு ஒரு மணிக்கு பொங்கல்...  50 ஆடுகளை வெட்டி 3,000 ஆண்களுக்கு விருந்து!

பிரேமலதா விஜயகாந்த் மீது பாய்ந்தது வழக்கு...தேர்தல் விதிமுறை மீறியதாக அதிரடி!

வனவிலங்குகளுடன் செல்ஃபி எடுக்கப் போறீங்களா?... 7 ஆண்டு சிறை உறுதி!

SCROLL FOR NEXT