கடன் சுமை... விஷம் குடித்து விவசாயி தற்கொலை!

மல்லப்பா ஹோரி
மல்லப்பா ஹோரி

கடன் சுமை தாங்க முடியாமல் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கல்புரகியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்புரகி
கல்புரகி

கர்நாடகா மாநிலம், கல்புரகி மாவட்டம் அஃபசல்பூர் தாலுகாவை சேர்ந்தர் மல்லப்பா ஹோரி (48). விவசாயியான இவர் கடந்த கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

தனது குழந்தைகளின் திருமணத்திற்காக ரூ.25 லட்சத்திற்கும் மேல் மல்லப்பா ஹோரி பிறரிடம் கடன் வாங்கியிருந்தார். விவசாயம் செழித்ததும் கடன் தொகையை அடைத்து விடலாம் என்று மல்லப்பா நினைத்திருந்தார்.

ஆனால், மழை பொய்த்துப் போனதால், பயிர் செய்ததில் நஷ்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள், தொகையை செலுத்தச் சொல்லி விவசாயி மல்லப்பா ஹோரிக்கு நெருக்கடி தர ஆரம்பித்தனர். இதனால் கடன்காரர் நெருக்கடியை சமாளிக்க முடியாத விவசாயி, மல்லப்பா ஹோரி விஷம் குடித்து இன்று தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அப்ஜலாபுர போலீஸார் விரைந்து வந்து, மல்லப்பா ஹோரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாங்கிய கடனை அடைக்க முடியாமல் விவசாயி தற்கொலை செய்த கொண்ட சம்பவம் கல்புரகியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரிக்கிறார்!

இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது... தமிழக மீனவர்கள் 19 பேர் கைது!

8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு சுகாதாரத்துறையில் வேலை: பிப்.22 வரை விண்ணப்பிக்கலாம்!

நடிப்பை உதறித் தள்ளி புத்த மதத்தைத் தழுவிய நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி!

கணவரைப் பிரிந்தார் சூர்யா பட நடிகை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in