பேருந்துகளில் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும்... படிக்கட்டு பயணத்தை தடுக்க உயர் நீதிமன்றம் அதிரடி!
தமிழ்நாட்டில் அனைத்து பேருந்துகளின் படிக்கட்டுகளிலும் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளி நேரத்தை கணக்கில் கொண்டு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற பொது வெளியில் பதிவான கோரிக்கையை கடந்த 2013 ம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ‘பள்ளி தொடங்கும் நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கினாலும், இளைஞர்களின் படிக்கட்டு பயணமும் விபத்தும் குறையவில்லை. ஓட்டுநர்களும், நடத்துனர்களும் எப்படி சமாளிப்பார்கள்.. பல இடங்களில் , ஓட்டுநர்களும், நடத்துநர்களும் இளைஞர்களால் தாக்கப்படும் காட்சிகள் அரங்கேறி வருகிறது. இளைஞர்கள் ஜாலியாக படிக்கட்டில் பயணம் செய்வதால் விபத்து ஏற்பட்டு இளைஞர்கள் பலியாகின்றனர். எனவே இளைஞர்களின், மாணவர்கள் உள்ளிட்டோரின் நலன் கருதி தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் படிகட்டு பயணத்தை தவிர்க்கும் வகையில் அனைத்து பேருந்துகளிலும் படிக்கட்டுகளில் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் படிக்கட்டுகளில் எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்தப்பட்டு உள்ளது?. எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்தப்படாமல் உள்ளது? என்பது குறித்து தமிழக உள் துறை செயலாளர், போக்குவரத்து துறை செயலாளர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்’ என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்... அகவிலைப்படி 25% அதிரடியாக உயர்வு!
இந்து கோயில் கட்டியதால் தான் துபாய் வெள்ளத்தில் மிதக்கிறது... பாகிஸ்தானியர் சர்ச்சை பேச்சு!
கள்ளத்துப்பாக்கி... ரத்தம் படிந்த கோடாரி... கோடநாடு வழக்கில் அதிமுக பிரமுகருக்கு சிக்கல்!
கும்பகோணத்தில் பரபரப்பு... 10 அடி பள்ளத்தில் சிக்கிய தேர் சக்கரம்... மீட்பு பணிகள் தீவிரம்!