
`போர் என்பதே கொடூரமானது என்றும் ஐக்கிய நாடுகள் அவையில் அனைத்து உலக நாடுகளும் ஓரணியாக நின்று கொடும் போரை நிறுத்த வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், `போர் என்பது கொடூரமானது. அது எந்த நோக்கத்திற்காக யாரால் நடத்தப்பட்டாலும் அதில் முதல் பலியாவது அப்பாவி பொதுமக்கள் தான். கடந்த பத்து நாட்களாக காஸா பகுதியில் நிலவும் போர் உலக மக்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. உயிருக்கு பயந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேறுவதும், மொத்தமாக அழிக்கப்பட்ட குடியிருப்புகளும், காயம் அடைந்த குழந்தைகளின் அழுகுரல்களும், குடிநீர் கிடைக்காமல் தவிப்போரின் வேதனையும் இதயம் உள்ளோரின் அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
போரின் போது மருத்துவமனைகள் தாக்கப்படக்கூடாது என்பதையும் மீறி மருத்துவமனைகள் தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் மரணம் அடைந்துள்ளனர். மனிதம் மரத்துப்போய்விட்டதா? உலக சமுதாயம் இனியும் இதை கைகட்டி வேடிக்கை பார்க்கக்கூடாது. ஐக்கிய நாடுகள் அவையில் அனைத்து உலக நாடுகளும் ஓரணியாக நின்று கொடும் போரை நிறுத்த வேண்டும். அப்பாவி பொதுமக்களின் உயிர்களை காக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
HBD JYOTHIKA | மறக்க முடியாத நாளும்... மறுத்து... பின் கிடைத்த வாய்ப்பும்!
இந்தியாவைத் தோற்கடிச்சா என் கூட டின்னர் சாப்பிடலாம்... சர்ச்சையைக் கிளப்பிய பிரபல நடிகை!
அதிர்ச்சி... இளம் மல்யுத்த வீராங்கனை தற்கொலை!
வரி ஏய்ப்பு புகார்... தமிழகத்தில் 30 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு!
சோகம்... எல்லாமே 2000 ரூபாய் நோட்டுக்கள்... 1.50 லட்சத்தை மாற்ற முடியாமல் தவிக்கும் பெண்மணி!