
``ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி படையெடுப்பதை பார்க்கும்போது, கஜினி முகமதுவே தோற்று விடுவார்'' என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னையில் இன்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”தமிழகத்தில் டெங்கு தலைவிரித்து ஆடுகிறது. அரசு மருத்துவமனைகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். ஆனால் மக்களின் நம்பிக்கை தகர்க்கும் வகையில் தான் திமுக அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன. சுகாதாரத்துறை அமைச்சர் ஒரு ஓட்டப்பந்தய வீரராக தான் இருக்கிறார். மருத்துவத்துறையில் தவறுகள் அதிக அளவில் நடக்கின்றன. தவறுகள் நடக்காத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழகத்தை சுகாதாரமான மாநிலமாக வைத்திருக்கும் எண்ணம் திமுகவுக்கு கிடையாது'' என்று கூறினார்.
செந்தில் பாலாஜி குறித்த கேள்விக்கு, ”கஜினி முகமது கூட தோற்றுவிடுவார் போல. கஜினி முகமது போல படையெடுத்து ஜாமீன், ஜாமீன் என கேட்டு, ஒரு நெத்திலி மீன் கூட கிடைக்காத நிலை தான் இருக்கிறது. நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது. அது நீதி வடிவில் இருக்கிறது” என்று கிண்டல் செய்தார் ஜெயக்குமார்
இதையும் வாசிக்கலாமே...
உலகின் நெ.1 கார்ல்சனை வீழ்த்திய தமிழர்.. இளம் சாதனையாளருக்கு குவியும் பாராட்டு!
மீண்டும் வெடித்து சிதறிய வால்நட்சத்திரம்... பூமியை நெருங்கும் ஆபத்து!
’லியோ’ விமர்சனம் : இதெல்லாமே பெரிய சறுக்கல்... புலம்பும் ரசிகர்கள்!
வாசகர்களுக்கு ரூ.5,00,000 பரிசு... கவிஞர் வைரமுத்து அறிவிப்பு!
அதிர்ச்சி... ரூ.1,000 கோடி மதிப்புள்ள ஜவுளிகள் தேக்கம்! கதறும் நெசவாளர்கள்!