
கோவையில் புதிதாக திறக்கப்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையம் 5 மாதம் கூட நிறைவடையாத நிலையில் சேதம் அடைந்துள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சி 52 வது வார்டு பீளமேடு கல்லூரி நகர் பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், 25 லட்சம் ரூபாய் மதிப்பில் கடந்த ஜூன் மாதம் 6-ம் தேதி முதலமைச்சரால் காணொலி காட்சி மூலம் நகர்ப்புற நல வாழ்வு மையம் புதிதாக திறக்கப்பட்டது. இந்த மையம் ஒரு நாளில் காலை மாலை இரு முறை மட்டுமே செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்ட இந்த மையத்தின் முன்புற தூணில் பெரியளவு விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் நிலையில் உள்ளது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இம்மையத்தில் சுற்றுப்புற சுவரும் இடிந்து பாதுகாப்பற்ற நிலையில் புதர் மண்டிக் கிடக்கிறது.
இதற்கு முன்பே அந்த தூணில் விரிசல் ஏற்பட்டு தற்காலிகமாக பணிகள் நடைபெற்றுள்ளதாக தெரிய வரும் நிலையில் தற்போது மீண்டும் விரிசல் ஏற்பட்டு, எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் ஆபத்தான நிலையில் இருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இடியும் நிலையில் உள்ள தூணையும் சுற்றுபுற சுவரையும் தரமான முறையில் கட்டி தர வேண்டும் எனவும் அவ்வப்போது இம்மையத்தின் வளாகத்தை தூய்மை செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
அதிரடி... 10,000 நிறுவனங்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்!
அதிர்ச்சி... இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது; பயணிகள் அவதி!
உருவானது ஹாமூன் புயல்... 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
துர்கா பூஜை பந்தலில் பயங்கர நெரிசல்... 5 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்த சோகம்
ராவண வதத்தில் பங்கேற்கும் முதல் பெண்... பிரபல இந்தி நடிகைக்கு குவியும் பாராட்டு