சொன்னதை செய்த ரேவந்த் ரெட்டி... தெலங்கானா மக்கள் வரவேற்பு!

கோப்பில் கையெழுத்திடும் முதல்வர் ரேவந்த் ரெட்டி.
கோப்பில் கையெழுத்திடும் முதல்வர் ரேவந்த் ரெட்டி.

தெலங்கானா முதல்வராக பதவியேற்றதும், காங்கிரஸ் கட்சி மக்களுக்கு அளித்த 6 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சட்டப்பூர்வாங்க பணிகளை மேற்கொள்ளும் கோப்பு, ஹைதராபாத், நம்பள்ளி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ரஜினிக்கு அரசு வேலை வழங்கும் கோப்பு ஆகிய இரண்டு கோப்புகளில் முதல்வர் ரேவந்த் ரெட்டி கையெழுத்திட்டார்.

மாற்றுத் திறனாளி பெண் ரஜினிக்கு அரசுப் பணிக்கான ஆணையை முதல்வர் ரேவந்த் ரெட்டி வழங்கினார்.
மாற்றுத் திறனாளி பெண் ரஜினிக்கு அரசுப் பணிக்கான ஆணையை முதல்வர் ரேவந்த் ரெட்டி வழங்கினார்.

தெலங்கானா மாநில சட்டப் பேரவை தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 6 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என அவர் உறுதி அளித்தார். அதன்படி, விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கடன் தள்ளுபடி, ஆர்டிசி பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம், பெண்களுக்கு மாதாந்தர நிதி உதவி, ரயத்து பரோசா திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு ரூ.16 ஆயிரம், ரூ.500 கியாஸ் சிலிண்டர், 200 யூனிட் வரை இலவச மின்சாரம் ஆகிய வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்துக்கான சட்டப்பூர்வாங்க பணிகளை மேற்கொள்ளும் கோப்பில் முதல்வர் கையெழுத்திட்டுள்ளார்.

இரண்டாவதாக, முதல்வர் ரேவந்த் ரெட்டி, தனது தேர்தல் பிரசாரத்தின்போது, நம்பள்ளியை சேர்ந்த எம்.காம் பட்டதாரியும், மாற்றுத்திறனாளி பெண்ணுமான ரஜினி, உடல் குறைபாடு காரணமாக தன்னால் தனியார் துறையிலோ, அரசு பணியிலோ வேலை பெற இயலவில்லை எனத் தெரிவித்தார்.

அப்போது, தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் உங்களுக்கு நிச்சயம் அரசு வேலை வழங்கப்படும் என ரேவந்த் ரெட்டி உறுதி அளித்திருந்தார்.

ஹைதராபாத் எல்.பி ஸ்டேடியத்தில் நேற்று பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில் மாற்றுத்திறனாளி பெண் ரஜினி வரவழைக்கப்பட்டு, அவருக்கு அரசுப் பணிக்கான ஆணையை முதல்வர் ரேவந்த் ரெட்டி வழங்கினார். தெலங்கானா முதல்வர் பிரசாரத்தில் உறுதி அளித்தபடி வாக்குறுதிகளை நிறைவேற்றும் கோப்பில் கையெழுத்திட்டது மற்றும் மாற்றுத் திறனாளி பெண் ரஜினிக்கு அரசு வேலை வழங்கியது ஆகிய செயலுக்கு அம்மாநில மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in