கச்சத்தீவு ராமநாதபுரம் மன்னர் குடும்பத்துக்குதான் சொந்தம்... அமைச்சர் ரகுபதி உறுதி!

அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ரகுபதி

"ராமநாதபுரம் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்களையும், பாதிக்கப்பட்ட மீனவர் சமுதாயங்களையும் சந்தித்து பேசி சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கும், கச்சத்தீவை மீட்பதற்கும் விரைவில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்" என்று அமைச்சர் ரகுபதி உறுதியளித்தார்.

அரசியல் களத்தில் கச்சத்தீவு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் திமுக, காங்கிரஸ், பாஜக தலைவர்கள், மாறி மாறி குறைகளை கூறி வருகின்றனர். கச்சத்தீவு பிரச்சினைக்கு காங்கிரஸ்தான் காரணம் என்று பாஜகவும், 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பாஜக, கச்சத்தீவை மீட்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியும் விமர்சித்து வருகின்றன. தேர்தல் அரசியலுக்காக கச்சத்தீவு விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளதாக தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினும் விமர்சித்திருந்தார்.

கச்சத்தீவு
கச்சத்தீவு

இதுகுறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, "பிரதமர் மோடிக்கு செலக்டிவ் அம்னீஷியா இருப்பதாக தெரிகிறது. 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது, கச்சத்தீவு குறித்து வாய் திறக்காமல் தற்போது தேர்தலுக்காக வாய் திறந்துள்ளார். அண்ணாமலை கூறுவது போல முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி, கச்சத்தீவை அளிப்பதற்கு எந்த ஒப்புதலும் தரவில்லை. அவர் ஒரு ராஜதந்திரி. இந்த பிரச்சினையை 2 ஆண்டுகள் ஒத்தி போட முடியுமா என்று தான் கேட்டாரே தவிர ஒரு போதும் விட்டு கொடுப்பதற்கு சம்மதிக்கவில்லை.

அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ரகுபதி

கச்சத்தீவு ராமநாதபுரம் மன்னருக்கு தான் சொந்தம். அவருடைய வாரிசுகள் இதுவரை சொந்தம் கொண்டாடவில்லை. சர்வதேச நீதிமன்றத்தில் ராமநாதபுரம் மன்னர் வாரிசு வழக்கு தொடர்ந்து, கச்சத்தீவு எங்களுக்குதான் சொந்தம் என்று கூறுவதற்கு சட்டத்தில் இடம் உண்டு. ராமநாதபுரம் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்களையும், பாதிக்கப்பட்ட மீனவர் சமுதாயங்களையும் சந்தித்து பேசி சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கும், கச்சத்தீவை மீட்பதற்கும் விரைவில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சரும் கச்சத்தீவை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எதிர்க்கட்சிகளை குற்றம் சாட்டுகின்றனர்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...   

கார் விபத்தில் சிக்கிய அஜித்... ’விடாமுயற்சி’க்காக உயிரை பணயம் வைத்து ரிஸ்க்; வைரல் வீடியோ!

சமுதாயத்தில் 60 சதவீதம் பேர் கெட்டவர்கள் தான்... இயக்குநர் ஹரி பரபர பேச்சு!

ஜஸ்ட் மிஸ்... பிரச்சாரத்தின் போது மாட்டுவண்டியில் இருந்து தவறி விழுந்த தேமுதிக வேட்பாளர்!

விஷத்தை சாக்லேட்டில் நனைத்து சாப்பிட்ட தம்பதி.. காருக்குள் இறந்து கிடந்த மனைவி!

மனைவி டார்ச்சர் தாங்கல... விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற மாஸ்டர் செஃப் பிரபலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in