டெல்லி மதுபான கொள்கை முறைகேடுக்கு பாஜக தான் காரணம் | ஆம் ஆத்மி எம்பி குற்றச்சாட்டு!

ஆம் ஆத்மி எம்பி- சஞ்சய் சிங்
ஆம் ஆத்மி எம்பி- சஞ்சய் சிங்

டெல்லி மதுபான கொள்கை ஊழல் முறைகேடு வழக்குக்கு பாஜக தான் காரணம் என ஆம் ஆத்மி கட்சியின் எம்பி- சஞ்சய் சிங் குற்றம் சாட்டினார்.

அர்விந்த் கேஜ்ரிவால் கைது
அர்விந்த் கேஜ்ரிவால் கைது

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு, அம்மாநிலத்தில் அரசியல் சூறாவளியாக உருவெடுத்துள்ளது. அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ ஆகிய இரு மத்திய விசாரணை அமைப்புகளின் அதிரடி நடவடிக்கையால் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு நிலை குலைந்துள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அக்கட்சியின் முன்னணி தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா, எம்பி- சஞ்சய் சிங், ஆகியோரைத் தொடர்ந்து முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், எம்பி- சஞ்சய் சிங் ஜாமீன் கோரி, தாக்கல் செய்த மனு தொடர்பாக அமலாக்கத் துறை எந்த ஆட்சேபணையும் தெரிவிக்காததால், உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை அவர் சிறையிலிருந்து வெளியே வந்தார்.

இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய் சிங், “டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை சிறையில் அடைக்க மிகப்பெரிய சதி நடந்துள்ளது. மதுபான ஊழலுக்கு பாஜக தான் காரணம். இந்த சதியில் அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கு பங்கு உள்ளது.

மகுண்டா ரெட்டி என்ற நபர் 3 முறையும், அவரது மகன் ராகவ் மகுண்டா 7 முறையும் வாக்குமூலம் அளித்துள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி, அர்விந்த் கேஜ்ரிவாலை தெரியுமா என மகுண்டா ரெட்டியிடம் அமலாக்கத்துறை கேட்டபோது, அவர் உண்மையைச் சொன்னார். ஆனால் அதன் பிறகு, அவரது மகன் கைது செய்யப்பட்டு, 5 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு அவர் தனது வாக்குமூலத்தை மாற்றி அளித்தார்.

பகத் சிங், அம்பேத்கர் புகைப்படங்களுடன் கேஜ்ரிவால் படம்
பகத் சிங், அம்பேத்கர் புகைப்படங்களுடன் கேஜ்ரிவால் படம்

கடந்த ஆண்டு பிப்ரவரி 10 முதல் ஜூலை 16 வரை, ராகவ் மகுண்டாவிடம் பெறப்பட்ட 7 வாக்குமூலத்தில் ஆறில், அவர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக எதுவும் சொல்லவில்லை. ஆனால் ஜூலை 16ம் தேதி பெறப்பட்ட 7வது வாக்குமூலத்தில், அவர் தனது நிலைப்பாட்டை மாற்றி சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக மாறினார். மேலும், அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக வாக்குமூலம் அளித்தார். 5 மாத சித்திரவதைக்குப் பிறகு, அவர் கேஜ்ரிவாலுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்கும் நிலைக்கு மாற்றப்பட்டார்” என்று கூறினார்.

சுனிதா கேஜ்ரிவால் இருக்கும் புகைப்படம் பின்புறத்தில் அம்பேத்கர், பகத்சிங் புகைப்படங்களுக்கு நடுவில் கேஜ்ரிவால் படமும் இடம்பெற்றது குறித்த கேள்விக்கு பதிலளித்த சஞ்சய் சிங், “தலைவர்கள் புகைப்படத்துடன் நம் புகைப்படத்தை வைப்பதால் அவர்களைப் போல் நாமும் பெரியவர்கள் என்பது கிடையாது. அவ்வாறு செய்வதானது, நாம் அவர்களால் வசீகரிக்கப்பட்டுள்ளோம் என்பதே அர்த்தம்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...   

சாதி வாரி கணக்கெடுப்பு... இலவச கல்வி... ஏழை குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!

கலக்கும் கருப்பையா... கலங்கும் துரைவைகோ... மலைக்கோட்டையில் மகுடம் யாருக்கு?

பெங்களூருவைத் தொடர்ந்து கேரளாவிலும் குண்டு வெடிப்பு... 2 பேர் படுகாயம்!

48 மணி நேரம் தான் டைம்: சந்திரபாபு நாயுடுவுக்கு கெடு விதித்த தேர்தல் ஆணையம்!

மத்திய அரசு அதிரடி அறிவிப்பு... இனி குழந்தையின் பிறப்பு பதிவேட்டில் இதுவும் கட்டாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in