அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள்தான் அழிவார்கள்... எடப்பாடி பழனிசாமி சபதம்!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அதிமுகவை அழிக்க பல்வேறு அவதாரங்களை திமுக எடுத்ததாகவும், அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் தானாக அழிந்து விடுவார்கள் எனவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் திருப்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் அருணாச்சலம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து இன்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் செங்கோட்டையன், வேட்பாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

திருப்பூர் வேட்பாளர் வெங்கடாசலத்தை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்
திருப்பூர் வேட்பாளர் வெங்கடாசலத்தை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்

அப்போது திமுகவை கடுமையாக விமர்சித்து அவர் கருத்துக்களை முன் வைத்தார். கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ”அதிமுகவை அழிப்பதற்காக பல அவதாரங்களை திமுக எடுத்தது. அதனை மக்களின் துணை கொண்டு தவிடு பொடி ஆக்கி உள்ளோம். அதிமுகவை முடக்க நினைத்ததை மக்கள் துணையோடு எதிர்கொண்டோம். அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் தான் அழிந்து போவார்கள்” என்றார்.

அதிமுக கூட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர்
அதிமுக கூட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர்

மேலும், “அதிமுக ஆட்சியில் ஏரி குளங்கள் தூர்வாரப்பட்டு நிலத்தடி நீர் உயர்த்தப்பட்டது. அதிமுக ஆட்சியின் போது அடித்தட்டு மக்களுக்கான பல திட்டங்கள் கிடைத்தன. அதிமுக தலைவர்கள் மக்களுக்காக பாடுபடுபவர்கள். வேறு சிலர் குடும்பத்திற்காக பாடுபடுகின்றனர் “ என்றார்.

இதையும் வாசிக்கலாமே...   

சாதி வாரி கணக்கெடுப்பு... இலவச கல்வி... ஏழை குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!

கலக்கும் கருப்பையா... கலங்கும் துரைவைகோ... மலைக்கோட்டையில் மகுடம் யாருக்கு?

பெங்களூருவைத் தொடர்ந்து கேரளாவிலும் குண்டு வெடிப்பு... 2 பேர் படுகாயம்!

48 மணி நேரம் தான் டைம்: சந்திரபாபு நாயுடுவுக்கு கெடு விதித்த தேர்தல் ஆணையம்!

மத்திய அரசு அதிரடி அறிவிப்பு... இனி குழந்தையின் பிறப்பு பதிவேட்டில் இதுவும் கட்டாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in