அதகளமாகும் ஆந்திரா... வாக்குப்பதிவில் வன்முறை வெறியாட்டங்கள்!

ஆந்திரா தேர்தல் வன்முறைக் காட்சிகள்
ஆந்திரா தேர்தல் வன்முறைக் காட்சிகள்

ஆந்திர மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று நடைபெற்று வரும் நிலையில் மாநிலம் முழுவதும் பல இடங்களில்  வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு
வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு

ஆந்திராவில் உள்ள 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆட்சியைப் பிடிப்பது யார் என்ற கடும் போட்டி நிலவி வரும் நிலையில்  ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே பல இடங்களில் மோதல்கள் நடைபெற்றுள்ளது. 

குறிப்பாக பல்நாடு மாவட்டத்தில் தாகேபள்ளி, கேசனப்பள்ளி கிராமத்தில்  வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்துச் செல்வது தொடர்பாக  தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர்.

வாகனம் உடைப்பு
வாகனம் உடைப்பு

கடப்பா மாவட்டத்தில் கமலாபுரம் பகுதியில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். தெலுங்கு தேசம் கட்சியின் வாக்குச்சாவடி முகவர் தாக்கப்பட்டுள்ளார். அன்னமையா மாவட்டம், கோடூர் தொகுதி, புல்லாம்பேட்டா மண்டலம் மற்றும் பாப்பக்கா கரி கிராமத்தில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தெலுங்கு தேசம் கட்சி முகவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

ரெண்டசிந்தலா பகுதியில்  தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்சிபி பிரிவினர் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலில் தெலுங்கு தேசம் கட்சி முகவர்கள் மூன்று பேர் காயமடைந்தனர். பல இடங்களில் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. புல்லாம்பேட் மண்டல் தலாய்பள்ளியில் உள்ள ஒரு சாவடியில் சிலர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கீழே போட்டு உடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

புங்கனூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள சதும் மண்டலத்தைச் சேர்ந்த போரகமண்டா பகுதியில், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 15 பூத் ஏஜெண்டுகளை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெத்திரெட்டி ராமச்சந்திரா ஆட்கள் கடத்திச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வாக்குப்பதிவு மையத்திற்கு சென்றபோது, 15 பேரும் அடித்து கட்டாயப்படுத்தி ஒரு வாகனத்திற்குள் ஏற்றி கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 

மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் மோதல் சம்பவங்களுக்கு தேர்தல் ஆணையம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. நிலைமையை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், கூடுதல் படைகளை சம்பந்தப்பட்ட  பகுதிகளுக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


இன்று முதல் 3 நாட்களுக்கு கன மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

பெலிக்ஸ் ஜெரால்டு எங்கே?! கண்டுபிடித்துத் தருமாறு மனைவி காவல்துறையில் மனு!

பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து... பல லட்ச ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசம்!

ஒரே நேரத்தில் ஒரு கோடி பேருக்கு தகவல்... பள்ளிக்கல்வித்துறை புதிய அப்டேட்ஸ்!

16,500 கோடி பயிர்க் கடன்... இந்த ஆண்டுக்கு இலக்கு நிர்ணயித்தது கூட்டுறவுத் துறை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in