யாரும் கண்டுக்கவே இல்லை... திண்டுக்கலில் தனித்துவிடப்பட்ட பாமக வேட்பாளர்!

திலகபாமா
திலகபாமா

திண்டுக்கல் தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து பிரச்சாரம் செய்ய அவரது சொந்த கட்சி தலைவர்கள் யாரும் தொகுதிக்கு வராத நிலையில், கூட்டணிக்கட்சி தலைவர்களும் தொகுதியை கண்டுகொள்ளவில்லை. இதனால் தனி ஆளாக தேர்தல் களத்தில் பாமக வேட்பாளர் போராடிவருகிறார்.

திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி, மா.கம்யூ., அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாரம் யெச்சூரி, தேசிய செயலாளர் பிரகாஷ்காரத், திருச்சி சிவா எம்.பி., பீட்டர் அல்போன்ஸ், திண்டுக்கல் லியோனி, நடிகர் கருணாஸ், மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன் என நட்சத்திர பேச்சாளர்கள் அதிகம் பேர் பிரச்சாரம் செய்தனர். அதிமுக கூட்டணியில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக்கை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் பிரச்சாரம் மேற்கொண்டு ஆதரவு திரட்டினர்.

விவசாயிகளுடன் திலகபாமா
விவசாயிகளுடன் திலகபாமா

நாம்தமிழர் கட்சி வேட்பாளர் கயிலைராஜனை ஆதரித்து செம்பட்டி, ஒட்டன்சத்திரம், ஆயக்குடி ஆகிய பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால் பாஜக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் ம.திலகபாமாவை ஆதரித்து திண்டுக்கல் தொகுதியில் பிரச்சாரம் செய்ய அவரது கட்சியை சேர்ந்த நிறுவன தலைவர் ராமதாஸ், மாநில தலைவர் அன்புமணி, முன்னாள் தலைவர் கோ.க.மணி ஆகிய யாரும் இதுவரை தொகுதிப்பக்கமே வரவில்லை.

திண்டுக்கல் தொகுதியை பாமகவிற்கு பெற்று வேட்பாளர் அறிவித்தோடு தங்கள் கடமை முடிந்துவிட்டது என பாமக கட்சி தலைமை முடிவு செய்துவிட்டதுபோல் தங்கள் கட்சி வேட்பாளரையே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.

நாற்று நட்டும், வடை சுட்டும் வாக்குசேகரிக்கும் திலகபாமா
நாற்று நட்டும், வடை சுட்டும் வாக்குசேகரிக்கும் திலகபாமா

தேர்தல் பிரச்சாரம் 17 ம் தேதி மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. பிரச்சாரம் முடிய இன்னும் இரண்டு தினங்களே உள்ளநிலையில் இதுவரை அக்கட்சி தலைவர்கள் வராதது பாமக வேட்பாளரை மட்டுமல்ல, பாமக நிர்வாகிகள், கூட்டணிக்கட்சியான பாஜக நிர்வாகிகளையும் சோர்வடையச் செய்துள்ளது. பாமக தலைவர்கள் தான் பிரச்சாரத்திற்கு வரவில்லை என்றால், கரூர் தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறைக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் திண்டுக்கல் தொகுதியை கண்டுகொள்ளவில்லை.

தனித்துவிடப்பட்ட நிலையில் உள்ள பாமக வேட்பாளர் திலகபாமா, இதை கண்டு எல்லாம் கவலைப்படாமல், தனது வித்தியாசமான பாணியில் மக்களை கவர்ந்துவருகிறார். வடைசுடுவது, மாம்பழம் விற்பது, நாற்றுநடுவது, கயிறுதிரிப்பது, பறை இசை அடிப்பது என பிரச்சாரத்தில் மக்களவை கவர்ந்து உள்ளூர் பாமக, பாஜக நிர்வாகிகளுடன் வாக்கு சேகரித்து வருகிறார்.

இதையும் வாசிக்கலாமே...   

அடேங்கப்பா ரூ.4,650 கோடி பறிமுதல்... முதற்கட்ட தேர்தலுக்கு முன்பே அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்!

அதிர்ச்சி... அம்பேத்கர் ஜெயந்தி ஊர்வலத்தில் பங்கேற்ற இளைஞர் வெட்டிக்கொலை!

பிரதமர் மோடியை பார்க்கச் சென்றவர் உயிரிழப்பு... பாதுகாப்புக்காக கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி பலி!

டயர் வெடித்து தலைகீழாக கவிழ்ந்த மணல் லாரி... மணலில் புதைந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சோகம்!

ஒபாமாவே அஞ்சு வருஷம் தான்... இடத்தை காலி பண்ணுங்க மோடி... முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ஆவேசம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in