என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?: அண்ணாமலைக்கு சவால் விடும் செல்வப்பெருந்தகை!

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

கச்சத்தீவு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக கணபதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், " இந்தியா கூட்டணிக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டனர். பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் அறிக்கையில் சொன்ன எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஆனால், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் சொன்ன 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார்.

அண்ணாமலை
அண்ணாமலை

இந்த தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எது சொன்னாலும் பொய் தான். தற்போது பிரதமர் மோடியும், அண்ணாமலையும் கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசி வருகின்றனர். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி தேசநலனுக்காகவும், நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் வாழ்ந்தவர். அவரை பிரதமர் e மோடியும், அண்ணாமலையும் கிண்டல் செய்கின்றனர்.

வெஜ்பேங் என்ற ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது என அண்ணாமலை படித்து தெரிந்து கொள்ளட்டும். 1976 மார்ச் 23-ம் தேதி கச்சத்தீவுக்கு ஒரு ஒப்பந்தம், வெஜ்பேங்குக்கு ஒரு ஒப்பந்தம் என்று இரண்டு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. அந்த ஒப்பந்தம் பற்றி தெரிந்து கொண்டு அண்ணாமலை பேச வேண்டும். அதுதொடர்பாக என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?

கச்சத்தீவு
கச்சத்தீவு

இந்திராகாந்தி போட்ட அந்த ஒப்பந்தத்தின்படி தான் கன்னியாகுமரியில் இருந்து 50 நாட்டிக்கல் மைல் தூரத்திலும், கொழும்புவில் இருந்து 150 நாட்டிக்கல் மைல் தூரத்திலும் உள்ள இந்திய எல்லையில், உலகத்தில் இல்லாத அளவுக்கு கனிம வளங்கள், கடலுக்கு அடியில் இருக்கிறது என்று கண்டுபிடித்துச் சொல்லியுள்ளனர். எனவே அண்ணாமலை கச்சத்தீவு-வெஜ்பேங் ஒப்பந்தம் குறித்து தெரியாமல் எதுவும் பேசக்கூடாது" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...   

கார் விபத்தில் சிக்கிய அஜித்... ’விடாமுயற்சி’க்காக உயிரை பணயம் வைத்து ரிஸ்க்; வைரல் வீடியோ!

சமுதாயத்தில் 60 சதவீதம் பேர் கெட்டவர்கள் தான்... இயக்குநர் ஹரி பரபர பேச்சு!

ஜஸ்ட் மிஸ்... பிரச்சாரத்தின் போது மாட்டுவண்டியில் இருந்து தவறி விழுந்த தேமுதிக வேட்பாளர்!

விஷத்தை சாக்லேட்டில் நனைத்து சாப்பிட்ட தம்பதி.. காருக்குள் இறந்து கிடந்த மனைவி!

மனைவி டார்ச்சர் தாங்கல... விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற மாஸ்டர் செஃப் பிரபலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in