பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம்... மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

மக்களவையில் தமிழகத்துக்கான பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பாஜக செல்லாக்காசாக்கிவிடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொகுதி மறுசீரமைப்பின் கீழ், மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவில் தொகுதியில் மறுசீரமைக்கப்பட உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அந்த வகையில், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தலா 8 மக்களவைத் தொகுதிகள் குறையும் என கூறப்படுகிறது. அதே சமயம் உத்தரபிரதேசத்தில் 11 தொகுதிகளும், பீகாரில் 10 தொகுதிகளும், ராஜஸ்தானில் 6 தொகுதிகளும், மத்திய பிரதேசத்தில் 4 தொகுதிகளும் அதிகரிக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த திட்டத்திற்கு ஏற்கெனவே தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்திய அரசின் மக்கள் தொகை கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பாக கடைபிடித்துள்ள மாநிலங்களுக்கு தண்டனை கொடுக்கும் வகையில் தொகுதிகள் குறைக்கப்படும் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. மத்திய அரசின் இந்த முயற்சிக்கு தனது எக்ஸ் தள பக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

அவரது பதிவில், ‘தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம் இது. இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாராதூரமான பாதகம் – தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது. தமிழ்நாடு உள்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதற்கு போடப்பட்டிருக்கிற அச்சாரம். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 888 பேர் அமரக்கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

தமிழ்நாட்டின் கோரிக்கைகளை, உரிமைக்குரலை இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காகக்கூட உச்ச நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். இதில், மக்களவையில் நமது பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பாஜக அரசு செல்லாக் காசாக்கி விடும்!

வரிப்பகிர்வில் ஏற்கெனவே பாரபட்சமான அநீதியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழ்நாட்டின் அறிவார்ந்த குரலை ஒடுக்கி, தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். மோடியின் பாஜகவுக்கு வாக்களிப்பதற்கும், எடப்பாடி பழனிசாமியின் அதிமுகவுக்கு வாக்களிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஒருவரும் வெற்றிபெற மாட்டார்கள்.

மக்களவையில் தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மாட்டேன் எனத் தேர்தலுக்காகப் பொய்யாகக் கூட மோடி வாக்குறுதி கொடுக்கமாட்டார். இத்தனை வெளிப்படையாகத் தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பாஜகவையும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளான அதிமுகவையும் புறக்கணிப்போம்! பாசிசத்தை வீழ்த்த - ஜனநாயகத்தையும் தமிழ்நாட்டையும் காக்க #Vote4INDIA!’ என்று பதிவிட்டுள்ளார் ஸ்டாலின்.

இதையும் வாசிக்கலாமே...  

சிங்கப்பூர் பிரதமர் திடீர் ராஜினாமா அறிவிப்பு... ஊழல் குற்றச்சாட்டுகள் எதிரொலி!

நயினார் நாகேந்திரன் வேட்புமனு நிராகரிக்கப்படுமா?... உயர் நீதிமன்ற வழக்கால் புதிய சிக்கல்!

39 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி... தமிழ்நாட்டில் லோக் போல் நடத்திய பரபரப்பு கருத்துக்கணிப்பு!

பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு தலைகீழாக பாய்ந்த பேருந்து... 5 பேர் உயிரிழப்பு: 40 பேர் படுகாயம்!

மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்... மீனவர்கள் அச்சம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in