கரூரில் ஓட்டு போட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

வாக்களித்த பின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
வாக்களித்த பின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

மாற்றத்திற்காக அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி மாநிலம் முழுவதும் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி முக்கிய வேட்பாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் தங்களது வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சொந்த ஊரான கரூர் தொகுதியில் தனது வாக்கினை செலுத்தினார்.

வாக்களித்த பின் கோவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்
வாக்களித்த பின் கோவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்

இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். நாட்டில் மாற்றம் வர வேண்டும் என்பதற்காக அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை தவறாமல் நிறைவேற்ற வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

வாக்களித்த பின் கோவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன்
வாக்களித்த பின் கோவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன்

இதேபோல் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், பெரம்பலூர் தொகுதி பாஜக வேட்பாளரும், ஐஜேகே கட்சியின் தலைவருமன பாரிவேந்தர் ஆகியோர் தங்களது வாக்குகளைச் செலுத்தினர். கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள் திமுகவின் கணபதி ராஜ்குமார், அதிமுகவின் சிங்கை ராமசந்திரன் ஆகியோரும் தங்களது வாக்குகளைச் செலுத்தினர்.

இதையும் வாசிக்கலாமே...


வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in