நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் அண்ணாமலையும், நீலகிரி தொகுதியில் எல். முருகனும், தென் சென்னை தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜனும் போட்டியிட உள்ளதாக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டு கட்ட பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் பாஜக போட்டியிடும் என்பது தொடர்பான வேட்பாளர் பட்டியல் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் போட்டியிடும் 9 வேட்பாளர்கள் கொண்ட முதல் கட்ட பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது.
இதன்படி தென் சென்னையில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் இருந்தும், மத்திய அமைச்சர் எல்.முருகன் நீலகிரி தொகுதியிலிருந்தும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சென்னை தொகுதியில் வினோஜ்.பி.செல்வமும், கிருஷ்ணகிரி தொகுதியிலிருந்து நரசிம்மனும், தூத்துக்குடி தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரனும், கன்னியாகுமரி தொகுதியில் இருந்து பொன்.ராதாகிருஷ்ணனும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வேலூர் தொகுதியில் ஏ.சி.சண்முகமும், பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தரும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
#BREAKING : ராம்தேவ்க்கு சம்மன்... நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்!
ஐபிஎல் போட்டி டிக்கெட்டுகள் கள்ளசந்தையில் விற்பனை: திமுக உடந்தை?! அதிருப்தியில் ரசிகர்கள்!
பாமகவுக்கு குடும்பமும், பணமுமே பிரதானம்... பொளந்து கட்டிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்!
பாஜக பிரமுகர் கழுத்தை நெரித்துக் கொலை: தகாத உறவைக் கண்டித்ததால் மனைவி வெறிச்செயல்!
பாஜக கொடியுடன் வந்த சொகுசு கார்... தேர்தல் அதிகாரிகளின் சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்!