சாரைப் பாம்பைக் கொன்று தோல் உரித்து கறியாக்கி சாப்பிட்ட இளைஞர்; வீடியோவால் சிக்கினார்

பாம்பின் தோலை உரித்து கழுவும் இளைஞர்
பாம்பின் தோலை உரித்து கழுவும் இளைஞர்
Updated on
2 min read

திருப்பத்தூர் அருகே சாரை பாம்பை அடித்துக் கொன்று தோல் உரித்து கறியாக்கி சாப்பிட்ட இளைஞரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று சொல் வழக்கு உள்ளது. அதை மெய்யாக்கும் வகையில், பாம்பை கண்டு மிகப்பெரிய அச்ச உணர்வு மக்களிடையே உள்ளது. ஏனெனில், பாம்பை தாக்கினால், அதன் விஷம் மனித உயிரிழப்பை ஏற்படுத்தும் என்பதால், பாம்பை கண்டால் விலகிச் செல்வதும், பயந்து ஓடுவதுமே அதிகம் நடக்கிறது. ஆனால், ஒரு இளைஞர், பாம்பை அடித்துக் கொன்று தோலை உரித்து கறியாக்கி சாப்பிட்டுள்ளார். அதுமட்டுமன்றி, அதை வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார். அதுவே அவருக்கு விணையாகவும் வந்துள்ளது.

மீனை கழுவதுபோல பாம்பை கழுவிய இளைஞர்
மீனை கழுவதுபோல பாம்பை கழுவிய இளைஞர்

திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகன் ராஜேஷ்குமார் (30). இவர் நேற்று சமூக வலைதளங்களில் சாரை பாம்பை தோல் உரிப்பது போல் வீடியோ ஒன்றை பதிவு செய்தார். அதில் சகஜமாக இறைச்சியை கழுவுவதுபோல, பாம்பை தோல் உரித்து கழுவியது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால், இந்த வீடியோ, சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது.

கைதான ராஜேஷ்குமார்
கைதான ராஜேஷ்குமார்

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட வனத்துறைக்கு தகவல் சென்றது. இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் மகேந்தின் உத்தரவின்படி, ராஜேஷ்குமாரை வனத்துறையினர் கைது செய்து விசாரித்தனர். அதில், பாம்பை அடித்துக் கொன்று தோலை உரித்து கறியாக்கி சாப்பிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். ஆர்வக்கோளாறில் பாம்பு கறியை சாப்பிட்டு, அதை வீடியோவாக எடுத்துப் போட்டு, தற்போது கம்பி எண்ணி வருகிறார் ராஜேஷ்குமார்.

இதையும் வாசிக்கலாமே...

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்... தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டி?

நடுவரின் தவறான தீர்ப்பு... உலகக்கோப்பை வாய்ப்பை இழந்த இந்திய கால்பந்து அணி: கொதிக்கும் ரசிகர்கள்!

ரஷ்யா - உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்ட மேலும் இரண்டு இந்தியர்கள் பலி!

விஜயின் ‘GOAT' பட கிளைமாக்ஸ் காட்சி இது தான்... மாஸ் சம்பவம் செய்த வெங்கட்பிரபு!

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: பாதுகாப்பு வீரர் பலி; 6 பேர் படுகாயம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in