இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு நீக்கப்படுமா? - சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் பரபரப்பு கருத்து!

நாரா லோகேஷ்
நாரா லோகேஷ்

பாஜக ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு நீக்கப்படும் என்று அமித் ஷா கூறியிருந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ், ஆந்திராவில் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு நீடிக்கும் என தெரிவித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தில் ஜெகன்மோகன் அரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தது மட்டுமின்றி ,16 மக்களவைத் தொகுதிகளை வென்று மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ‘கிங் மேக்கர்’ கட்சியாகவும் தெலுங்கு தேசம் உருவெடுத்துள்ளது.

இந்த சூழலில் பாஜகவின் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து வாக்குறுதி குறித்துப் பேசிய நாரா லோகேஷ், “ஆந்திராவில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு கடந்த 20 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதை நாங்கள் ஆதரிக்கிறோம், இதை நாங்கள் தொடரவே போகிறோம்.

சந்திரபாபு நாயுடு மகன்
சந்திரபாபு நாயுடு மகன்

இட ஒதுக்கீடு என்பது திருப்திப்படுத்தும் அரசியல் இல்லை. ஆந்திராவில் சிறுபான்மையினரின் தனிநபர் வருமானம் மிகக் குறைவாக இருக்கிறது. ஒரு அரசின் பொறுப்பு வறுமையில் இருப்பவர்களை மீட்டெடுப்பது தான். எனவே, இது திருப்திப்படுத்தும் அரசியல் இல்லை, அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்கும் அரசியல். சமூக நிதியை நிலைநாட்டவே அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

நமது நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற விரும்பினால் நாம் யாரையும் புறந்தள்ளிவிட முடியாது. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்தால் மட்டுமே நமது நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற முடியும். அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் செல்வதே தெலுங்கு தேசம் கட்சியின் நிலைப்பாடு. அதுவே எப்போது தொடரும்" என்று அவர் தெரிவித்தார்.

நாரா லோகேஷ்
நாரா லோகேஷ்

தொடர்ந்து பேசிய அவர், “ என்டிஏ கூட்டணியில் இணைந்து பயணிக்கவே விரும்புகிறோம். வலுவான மாநிலங்கள் இணைந்தே வலுவான நாடுகளை உருவாக்குகின்றன. ஆந்திர மாநிலம் 1 டிரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கை எட்டும் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் எப்போதும் இந்த பதவி வேண்டும், அந்தப் பதவி வேண்டும் எனக் கேட்டதே இல்லை. மாநிலத்திற்கு அதிக நிதி தேவை என்ற அடிப்படையிலேயே பேச்சுவார்த்தை நடத்துகிறோம். அமைச்சர் பதவிகளில் எங்களுக்கு ஆர்வம் இல்லை, மாநில நலனே முக்கியம்” என்று லோகேஷ் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

மத்திய அமைச்சராகும் அண்ணாமலை... தயாராகும் பட்டியல்!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை!

நடிகை கங்கனாவை அறைந்தது ஏன்?: சிஐஎஸ்எஃப் பெண் காவலர் விளக்கம்!

நள்ளிரவில் அதிர்ச்சி... மீன் வியாபாரி உட்பட இருவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற கும்பல்!

பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் ராகுல்காந்தி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in