விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படுமா? - சத்யபிரதா சாஹு பதில்!

சத்யபிரதா சாஹு
சத்யபிரதா சாஹு

விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என தேமுதிக சார்பில் கோரிக்கை வைத்துள்ளது தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு பதிலளித்துள்ளார்.

விருதுநகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரமேலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “ விருதுநகரில் விஜயபிரபாகரன் கடைசி வரைக்கும் களத்தில் ஒரு வெற்றி வீரராக தனது அத்தனை முயற்சிகளையும் எடுத்து கடைசி நிமிடத்தில் அவர் தோல்வி அடைந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உறுதியாக நான் சொல்கிறேன். விஜயபிரபாகரன் தோல்வியடையவில்லை. தோற்கடிக்கப்பட்டுள்ளார். வீழ்ச்சியடையவில்லை, வீழ்த்தப்பட்டிருக்கிறார். இது தமிழகத்தில் இருக்கும் அத்தனை மக்களுக்கும் தெரியும்.

தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது. தேர்தல் ஆணையத்திடம் இது தொடர்பாக புகார் அளிக்க உள்ளோம். விரைவில் தேர்தல் ஆணையம் ஒரு நல்ல முடிவை தரும் என எதிர்பார்க்கிறோம். நீதிமன்றத்துக்கு சென்றால் வழக்கை கிடப்பில் போட்டு விடுவார்கள். எனவே தான் வழக்கு தொடரவில்லை. நீதிமன்றத்தில் உடனடியாக தீர்வு கிடைக்கும் என்றால் நாங்கள் உடனடியாக வழக்குத் தொடுக்க தயார்" என்று அவர் தெரிவித்தார்.

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, “விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்துவது தொடர்பாக இதுவரை தேர்தல் ஆணையத்திற்கு புகார் எதுவும் வரவில்லை. மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பாக உயர் நீதிமன்றத்தை நாடுவதே முறை. உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரிலேயே மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தல் நடைபெற்று 45 நாட்களுக்கு பதிவான வாக்குகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்” என்று அவர் கூறினார்.

ராதிகா சரத்குமார், விஜய பிரபாகரன், மாணிக்கம் தாகூர்
ராதிகா சரத்குமார், விஜய பிரபாகரன், மாணிக்கம் தாகூர்

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர், தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார், நாம் தமிழர் சார்பில் கவுசிக் ஆகியோர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின்போது அந்தத் தொகுதியில் தொடக்கம் முதலே தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் முன்னிலையில் இருந்தார். ஆனால், மதியத்துக்கு மேல் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதனை தொடர்ந்து இறுதி சுற்றுகளில் காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையும் வாசிக்கலாமே...

ஒரே நாளில் தங்கம் விலை ஒரே சவரனுக்கு ரூ.600 உயர்வு... மக்கள் அதிர்ச்சி!

டிரக்கிங் சென்ற கர்நாடகாவை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு!

கடனைத் திருப்பிக் கேட்ட பெண் கொன்று புதைப்பு... 20,000 ரூபாய்க்காக கொடூரம்!

மத்திய அமைச்சர் ஆகிறாரா எச்.டி. குமாரசாமி? குறி வைக்கும் முக்கிய இலாகா!

வைகாசி மாத அமாவாசை... ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in