கீர்த்தி ஷெட்டி எனக்கு ஜோடியாகும் வாய்ப்பை ஏன் தவிர்த்தேன்? - விஜய் சேதுபதி பகிர்ந்த சுவாரசியம்

விஜய் சேதுபதி - கீர்த்தி ஷெட்டி
விஜய் சேதுபதி - கீர்த்தி ஷெட்டி

’என் மகன் வயதை ஒத்தவரும், ’உப்பெனா’ திரைப்படத்தில் மகளாக நடித்தவருமான கீர்த்தி ஷெட்டி, என்னுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை வலிய தவிர்த்தேன்’ என்று தெரிவித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

வித்தியாசமான நடிப்பு மட்டுமன்றி, தனது தனித்துவ குணாதிசயம் மற்றும் அதனை வெளிப்படுத்துவதிலும் வித்தியாசம் காட்டி வருபவர் விஜய் சேதுபதி. இவரது முதன்மை தோற்றத்திலான ’மகாராஜா’ திரைப்படம் அடுத்த வெள்ளியன்று வெளியாக இருக்கிறது. இதனையொட்டிய சந்திப்பு ஒன்றில், பல சுவாரசியங்களை பகிர்ந்து கொண்ட விஜய் சேதுபதி, டோலிவுட் தாரகை கீர்த்தி ஷெட்டியுடன் ஜோடி சேரும் வாய்ப்பை தான் தவிர்த்தது குறித்தும் தெரிவித்திருக்கிறார்.

மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதி
மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதி

பொன்ராம் இயக்கத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான திரைப்படம் டிஎஸ்பி. இதில் விஜய் சேதுபதி ஜோடியாக முதலில் பரிசீலிக்கப்பட்டவர் கீர்த்தி ஷெட்டி. தென்னகத்தில் வேகமாக வரவேற்பு பெற்று வளர்ந்துவரும் கீர்த்தி ஷெட்டியை டிஎஸ்பியில் நடிக்க வைப்பதன் மூலம் திரைப்படத்தின் வருமான சந்தை மேலும் விரிவடையும் என்பது தயாரிப்பாளர் கணக்காக இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பை விஜய் சேதுபதி வலிய தடுத்தாராம்.

தனது மகனை விட சற்றே வயதில் பெரியவரான கீர்த்தி ஷெட்டி தனக்கு ஜோடியாக இருப்பது பொருத்தமாக இருக்காது என்பதோடு, கீர்த்தி ஷெட்டியின் தந்தையாக ’உப்பென’ படத்தில் தான் நடித்தது குறித்து டிஎஸ்பி தயாரிப்பாளர் அறிந்திராததும் இந்த தடுமாற்ற பரிசீலனையின் பின்னணியில் இருந்ததாக விஜய் சேதுபதி தெரிவித்திருக்கிறார். கீர்த்தி ஷெட்டியை தெலுங்குக்கு வெளியேயும் பரவலாக அறியச் செய்ததில் உப்பென திரைப்படத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. இந்த திரைப்படத்தில் கீர்த்தியின் தந்தையாக விஜய் சேதுபதி மிரட்டியிருப்பார்.

உப்பென திரைப்படத்தில்
உப்பென திரைப்படத்தில்

”உப்பென படத்தில் என்னுடனான காட்சிகளில் கீர்த்தி ஷெட்டியின் தேகம் நடுங்குவதை ஒரு சில தருணங்களில் கவனித்திருக்கிறேன். அவர் எனது நடிப்பில் தனது தந்தையை கண்டுகொண்டதையும் பின்னர் புரிந்து கொண்டேன். இதனால் பிற்பாடு கீர்த்தி ஷெட்டியுடன் ஜோடி சேரும் வாய்ப்பு டிஎஸ்பி திரைப்படத்துக்காக வந்தபோது அதனை நான் வலிய மறுத்துவிட்டேன்” என்று விஜய் சேதுபதி தெரிவித்திருக்கிறார்.

விஜய் சேதுபதி நடிப்பில் அவரது 50வது திரைப்படம் என்ற பெருமையுடன் ஜூன் 14 அன்று திரையரங்குகளில் மகாராஜா வெளியாக இருக்கிறது. ’குரங்கு பொம்மை’ நித்திலன் சுவாமிநாதன் இதனை இயக்கியுள்ளார். பாலிவுட் நடிகர்-இயக்குனர் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி நட்ராஜ் மற்றும் அபிராமி ஆகியோர் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

மத்திய அமைச்சராகும் அண்ணாமலை... தயாராகும் பட்டியல்!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை!

நடிகை கங்கனாவை அறைந்தது ஏன்?: சிஐஎஸ்எஃப் பெண் காவலர் விளக்கம்!

நள்ளிரவில் அதிர்ச்சி... மீன் வியாபாரி உட்பட இருவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற கும்பல்!

பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் ராகுல்காந்தி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in