தான் பலாத்காரம் செய்த பெண்ணுக்கு, வேறு ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடப்பதை அறிந்த இளைஞர் ஒருவர், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அந்த பெண்ணை கடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம், போபாலில் உள்ள அசோக் நகரைச் சேர்ந்த கல்லு என்ற சலீன் கான் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு வீட்டிற்குள் புகுந்து 22 வயது பெண்ணைக் கடத்த முயற்சி செய்துள்ளார். அங்கு வேறு ஒரு இளைஞருடன் அந்த பெண்ணுக்கு திருமண ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. இதையடுத்து வாள் மற்றும் இரும்புக்கம்பியைக் காட்டி அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி விட்டு அந்த இளம்பெண்ணை சலீம் கான் இழுத்துச் சென்றார்.
இந்த கடத்தலைத் தடுக்க முயன்ற இளம்பெண்ணின் பெற்றோரை கொடூரமாக அந்த கும்பல் தாக்குகிறது. இதில் இளம்பெண்ணின் தந்தையின் கால் உடைக்கப்பட்டது. அவளது சகோதரின் கை உடைக்கப்பட்டது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக ஊடங்களில் இன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தன்னால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடப்பதை அறிந்துதான் சலீம் கான், வீடு புகுந்து இளம்பெண்ணை கடத்தினார் என்பது கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து, கல்லு என்கிற சலீம் கான், ஜோதா, சமீர் மற்றும் ஷாருக் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
இதற்கு முன்பு ஒரு இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து அவரது அந்தரங்க புகைப்படத்தை சமூக வலைதளங்களில் சலீம் கான் வெளியிட்டுள்ளார். அது தொடர்பாக அவர் மீது ஏற்கெனவே வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
வேளாங்கண்ணி மாதாவிற்கு தங்ககிரீடம் அணியும் நிகழ்ச்சி... மனமுருக கிறிஸ்துவர்கள் பிரார்த்தனை!
விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்து வரும் பிரதமர் மோடி: வெளியானது புது வீடியோ
சாவர்க்கர் குறித்து அவதூறு: ராகுல் காந்தி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
பெங்களூரு விமான நிலையத்தில் தட்டித் தூக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா... அதிரடி காட்டிய எஸ்ஐடி!
வரலாறு காணாத வெப்பம்... 19 பேர் சாவு: மருத்துவமனையில் 40 பேர் அனுமதி!