வைகோ
வைகோ

ஆபத்தான திட்டங்களை செயல்படுத்த பாஜக முயற்சி; வைகோ குற்றச்சாட்டு!

இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவது, இஸ்லாமியர்களுக்கு ஓட்டுரிமையை அகற்றுவது, இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை மட்டுமே ஆட்சி மொழியாக்குவது உள்ளிட்ட பல திட்டங்களை பாஜக வைத்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வைகோ, “இந்திய நாட்டின் வரலாற்றில் 47 ஆண்டுக்குப் பின் நாம் சந்திக்கும் இந்த தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல். பாராளுமன்ற ஜனநாயகம் நீடிக்க வேண்டுமா அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சி அமைய வேண்டுமா என்பதற்கு விடை சொல்லும் தேர்தல். பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டது. காஷ்மீரில் 370 வது அரசியல் சட்டம் குப்பையில் போடப்பட்டது” என்றார்.

பாஜக
பாஜக

மேலும் “சனாதன சக்திகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அகமதாபாத்தில் இந்திய அரசியலை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்று தீர்மானித்து ஒரு பிரகடனத்தை வெளியிட்டனர். அதில் இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்ற வேண்டும், இஸ்லாமியர்களுக்கு ஓட்டுரிமை கிடையாது, இந்தி, சமஸ்கிருதம் மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முன்வைத்து பேசியுள்ளனர். எனவே தான் மோடி ஆட்சி முறையில் பல மடைமாற்றங்களை கொண்டு வருகிறார்.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

பிரதமர் மோடிக்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தி விட்டால் அவரே குடியரசுத் தலைவராகவும் முயற்சிக்கிறார். ஆகவே ஜாதி மதங்களால் நாட்டை பிளவுபடுத்துவதே குறியாக உள்ளனர். 130 கோடி மக்களுக்கு தலைவரான பிரதமர் ஒரு பண்போடு பேச வேண்டும். எதிர்க்கட்சிகளை மதிக்க வேண்டும்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

வாக்காளர்களுக்கு இடையூறு... நடிகர் விஜய் மீது போலீஸில் புகார்!

என் மகனுக்கு தர்ற தண்டனை ஒரு பாடமாக இருக்க வேண்டும்... மாணவி கொலை வழக்கில் குற்றவாளியின் தந்தை கதறல்!

நடுவானில் வெடித்துச் சிதறிய ஹெலிகாப்டர்... ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலி!

உஷார்... வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல்... தமிழக எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

பாகிஸ்தானிலிருந்து பஞ்சாப் எல்லையில் நுழைய முயன்ற ட்ரோன்; பிஎஸ்எஃப் அதிரடி நடவடிக்கை!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in