அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகே வள்ளலார் மையம் கட்டப்படும்... தமிழக அரசு உறுதி!

சர்வதேச மையம் கட்டப்படும் இடம்
சர்வதேச மையம் கட்டப்படும் இடம்

"வடலூர் வள்ளலார் சத்தியஞான சபையில் அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகே சர்வதேச மையம் கட்டப்படும்" என்று, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.

வடலூரில் சத்தியஞான சபை பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்த்தும், ஆதரித்தும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, 'வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பது தொடர்பான அரசாணையை எதிர்ப்பது ஏன், அதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன, வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைந்தால் வள்ளலாரின் தத்துவங்கள், கொள்கைகள் உலகம் முழுவதும் பரவும் அல்லவா, வள்ளலாரின் தத்துவங்களை ஊக்கவிக்கும் அரசு முடிவில் எந்த தவறும் இல்லையே' என்று கேள்விகள் எழுப்பப்பட்டன.

வள்ளலார்
வள்ளலார்

மேலும், "அரசின் திட்டம் வள்ளலாரின் தத்துவங்களுக்கு விரோதமானவை என நிரூபித்தால் மட்டுமே அரசு முடிவில் நீதிமன்றம் தலையிட முடியும்" என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பில், "கடந்த 1867–1872ம் ஆண்டுகளில் 106 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்ட சத்திய ஞான சபை அப்படியே இருக்க வேண்டும் என்பது வள்ளலாரின் விருப்பம். பெருவெளியில் கட்டுமானம் மேற்கொள்வது வள்ளலாரின் விருப்பத்துக்கு முரணானது. பெருவெளியில் புராதன சின்னங்கள் இருப்பதாக தொல்லியல் துறை அறிக்கையில் தெரிவித்திருப்பதால் அதில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள கூடாது" என்று தெரிவிக்கப்பட்டது

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் (மாதிரி)
வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் (மாதிரி)

இதற்கு, "தொல்லியல் துறை ஆய்வில், இப்பகுதியில் சில கட்டுமானங்களின் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. நூறு ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தைச் சேர்ந்த அவை தொல்லியல் துறை முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல" என்று அரசு தரப்பில் முன்வைக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "சத்தியஞான சபையில் கட்டப்பட்ட இந்த கட்டிடங்களை பராமரிப்பதில் ஏன் இவ்வளவு மெத்தனம், பெரிய ஞானியை பராமரிக்காதது ஏன், எப்படி ஆக்கிரமிப்பு அனுமதிக்கப்பட்டது, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து மொத்த 106 ஏக்கர் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அரசுக்கு உத்தரவிட்டனர்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சர்வதேச மையம் கட்டுவதற்கு, திட்ட அனுமதி பெறப்பட்டதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பிய போது, 'அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகே வள்ளலார் சர்வதேச மையம் கட்டும் பணிகள் துவங்கப்படும். ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது. மேலும், சத்திய ஞான சபைக்கு அறங்காவலர் நியமிப்பது குறித்து விளக்கம் அளிக்க அரசுத்தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், விசாரணையை ஜூன் 24 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

பாகிஸ்தானை இந்தியா மதிக்க வேண்டும்; அணுகுண்டு வெச்சிருக்காங்க... சர்ச்சையைக் கிளப்பிய மணிசங்கர் ஐயர்!

பகீர்... ஓடும் பைக்கில் தீக்குளித்த காதலர்கள்!'பாகுபலி’ 3-ம் பாகம்... கட்டப்பாவும் இருக்கிறார்... ராஜமவுலி கொடுத்த சூப்பர்

அப்டேட்!இளையராஜா புது டிரெண்ட் உருவாக்குகிறார்! - வழக்கறிஞர் சரவணன்

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்... நடிகை நமீதா கொடுத்த ’நச்’ ரியாக்‌ஷன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in