செல்போன் டவர் சரிந்து விபத்து
செல்போன் டவர் சரிந்து விபத்து

பலத்த காற்று: வீட்டின் மேல் சாய்ந்து விழுந்த செல்போன் டவர்!

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே பலத்த காற்றின் காரணமாக வீட்டின் மீது செல்போன் டவர் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே கலாம் நகர் பகுதியில் ஆனந்த் என்பவரது வீடு உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியுள்ளது. அப்போது, அப்பகுதியில் வலுவின்றி, காற்றில் ஆடிக் கொண்டிருந்த செல்போன் டவர், ஆனந்த் வீட்டின் மீது சரிந்து விழுந்தது.

வீட்டின் மீது சரிந்து விழுந்த செல்போன் டவர்
வீட்டின் மீது சரிந்து விழுந்த செல்போன் டவர்

இதில் வீட்டின் தண்ணீர் தொட்டி, மதில் சுவர் ஆகியவை உடைந்து சேதமடைந்தது. எனினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் எவ்வித காயமோ, உயிர்சேதமோ ஏற்படவில்லை. மேலும், இந்த விபத்து குறித்து வீட்டின் உரிமையாளர் ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட செல்போன் டவர் சொந்தமான நிறுவனத்தின் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், செல்போன் டவர் சரிந்து விழுந்து இரண்டு நாள்கள் ஆகியும் தற்போது வரை அதனை அகற்ற எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது.

ஆரோவில் காவல் நிலையம்
ஆரோவில் காவல் நிலையம்

இதனால் புகார் அளித்த வீட்டின் உரிமையாளர் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். கடந்த சில நாள்களாக திடீரென கன மழை, பலத்த சூறாவளி காற்று வீசுவதால், இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கருத்து கணிப்புகள் 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் தயாரிக்கப்பட்டவை; மம்தா அதிரடி!

சென்னையில் இருந்து கிளம்பிய விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... உடனடியாக இறக்கி விடப்பட்ட 182 பயணிகள்!

5 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வனப்பகுதிக்கு திரும்பிய யானை!

மின்னல் தாக்கி பயங்கர தீ விபத்து... அடுத்தடுத்து எரிந்து நாசமான 4 கடைகள்!

x
காமதேனு
kamadenu.hindutamil.in