நாகாம்மாள் கோயில் கருவறைக்குள் நல்ல பாம்பு... பக்தி பரவசத்தில் கையெடுத்து கும்பிட்ட பக்தர்கள்!

கருவறைக்குள் நுழைந்த பாம்பு
கருவறைக்குள் நுழைந்த பாம்பு
Updated on
2 min read

திண்டுக்கல் அருகே ஜடாமுனிஸ்வரர் நாகம்மாள் கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. சிலை பிரதிஷ்டை செய்த மறு நொடியே கருவறைக்குள் நல்ல பாம்பு புகுந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

கோயில் கும்பாபிஷேகத்தில் பக்தர்கள்
கோயில் கும்பாபிஷேகத்தில் பக்தர்கள்

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஒன்றியம், கோம்பைப்பட்டி கிராமம் அய்யா பட்டியில் ஸ்ரீ ஜடாமுனிஸ்வரர், நாகம்மாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. கோயில் பூசாரி முத்துசாமி மற்றும் ஜெயகிருஷ்ணன் தலைமையில் 15 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் மூன்று கால யாக பூஜையானது நடைபெற்றது.

இந்நிலையில், இன்று சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மூலிகை யாகம் வளர்க்கப்பட்டு பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க தீர்த்த குடங்கள் கலசம் நோக்கி புறப்பட்டது.

கோயில் கருவறைக்குள் நுழைந்த நல்லப்பாம்பு
கோயில் கருவறைக்குள் நுழைந்த நல்லப்பாம்பு

பின்னர் கருட தரிசனம் முடிந்து மகா கும்பாபிஷேகமானது வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் நத்தம், சாணார்பட்டி, கோபால்பட்டி, அதிகாரிப்பட்டி, அஞ்சுகுளிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக முதல் கால யாக பூஜை துவங்கி ஜடாமுனிஸ்வரர் மற்றும் நாகம்மாள் சிலை பிரதிஷ்டை செய்த போது கருவறைக்குள் நல்ல பாம்பு குடி புகுந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் பக்தி பரவசத்தில் ஆச்சரியத்துடன் கைகூப்பி வணங்கி அருளாசி பெற்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

திருநங்கைகளுக்கு அனைத்து அரசு பணிகளிலும் 1 சதவீத இடஒதுக்கீடு... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி பயங்கர விபத்து... 4 பேர் பலி; பலர் படுகாயம்

சவுதி அரேபியாவில் கடும் வெப்பம்: ஹஜ் பயணம் சென்ற 19 யாத்ரீகர்கள் உயிரிழப்பு!

5 மாடுகளின் உயிரைப் பறித்த பரோட்டா... கொல்லம் அருகே பரிதாபம்!

நள்ளிரவில் அதிர்ச்சி... வீட்டு வசதி வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்ததால் பரபரப்பு: இளைஞர் படுகாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in