சென்னையைத் தொடர்ந்து கோவை விமான நிலையத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல்... பாதுகாப்பு அதிகரிப்பு

கோவை விமான நிலையம்
கோவை விமான நிலையம்
Updated on
2 min read

சென்னை விமான நிலையத்தை தொடர்ந்து கோவை விமான நிலையத்திற்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, மத்திய தொழில் பாதுகாப்புப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை விமான நிலைய ஆணையக மின்னஞ்சல் முகவரிக்கு இன்று காலை மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் துபாய் செல்லும் விமானத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. உடனடியாக இது தொடர்பாக விமான நிலைய பாதுகாப்புப்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே இது போன்று 6 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததால், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். சோதனை முடிவில் இது புரளி என்பது தெரியவந்தது.

வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு மிரட்டல்

இதனிடையே இதே போன்று, கோவை விமான நிலையத்திற்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோவை விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த விமானங்களில் பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் உடைமைகள், மெட்டர் டிடெக்டர்கள் மூலமும், மோப்பநாய்கள் உதவியுடனும் சோதனை செய்யப்பட்டது. இருப்பினும் இந்த சோதனையில் மர்ம பொருட்கள் எதுவும் கிடைக்காததால், இந்த மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்தது.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

இதனிடையே இந்த மின்னஞ்சல்கள் குறித்து போலீஸார் நடத்திய ஆய்வில், இவை துருக்கி நாட்டு தலைநகர் இஸ்தான்புல் நகரில் இருந்து அனுப்பப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து இது போன்று மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பி வரும் நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த திடீர் சோதனை காரணமாக கோவை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் வாசிக்கலாமே...

தமிழகத்தில் இன்று முதல் 21-ம் தேதி வரை இடியுடன் மழை பெய்யும்... வெயிலும் 5 டிகிரி அதிகமாக இருக்கும்!

நெடுந்தீவு அருகே பரபரப்பு... தமிழக மீனவர்கள் 4 பேரை சுற்றி வளைத்து கைது செய்த இலங்கை கடற்படை!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வீரர் வரலாற்றுச் சாதனை!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கைவிட வேண்டும்... ராகுலை தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தல்!

சோகம்... ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தங்கைகள் 4 பேர் பலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in