மாதவரம் ஆவின் பால் பண்ணையில் உற்பத்தி நிறுத்தம்: 2 லட்சம் லிட்டர் பால் விநியோகம் பாதிப்பு!

ஆவின் பால்
ஆவின் பால்

சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் பால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் 2 லட்சம் லிட்டர் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை மாதவரத்தில் ஆவின் பால் பண்ணை உள்ளது. இங்கிருந்து தினமும் 4.50 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் தயார் செய்யப்பட்டு சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

ஆவின் பால் உற்பத்தி
ஆவின் பால் உற்பத்தி

இந்நிலையில் மாதவரம் பால் பண்ணையில் உற்பத்தி பாதிக்கப்பட்டு, சுமார் 30 வாகனங்கள் விநியோகத்துக்கு செல்லாமல் பால் பண்ணை வளாகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக சென்னையில் 2 லட்சம் லிட்டர் பால் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெளி மாவட்டங்களிலிருந்து மாதவரம் பால் பண்ணைக்கு வர வேண்டிய தினசரி பால் வரத்து வராததாலும், பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாகவும் மாதவரம் ஆவின் பால் பண்ணையில் பால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாதவரம் ஆவின் பால் பண்ணை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள்
மாதவரம் ஆவின் பால் பண்ணை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள்

இதன் காரணமாக காலை 7 மணிக்கு பால் கொண்டு செல்ல வேண்டிய வாகனங்கள் புறப்படவில்லை என்றும், அதற்கு பிறகு பால் உற்பத்தி நடைபெற்றாலும் காலை 11 மணிக்கு பிறகே பால் விநியோகம் துவங்கும் என்றும் மாதவரம் ஆவின் பால் பண்ணை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஆவின் பால் உற்பத்தி, விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

மத்திய அமைச்சராகும் அண்ணாமலை... தயாராகும் பட்டியல்!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை!

நடிகை கங்கனாவை அறைந்தது ஏன்?: சிஐஎஸ்எஃப் பெண் காவலர் விளக்கம்!

நள்ளிரவில் அதிர்ச்சி... மீன் வியாபாரி உட்பட இருவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற கும்பல்!

பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் ராகுல்காந்தி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in