கொடுமை! 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை தந்த 28 வயது இளம்பெண்... போக்சோ சட்டத்தின் கீழ் கைது!

சிறுவனுக்கு பாலியல் தொல்லை
சிறுவனுக்கு பாலியல் தொல்லை
Updated on
2 min read

போடிநாயக்கனூர் அருகே 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 28 வயது இளம்பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே சில்லமரத்துபட்டி கிராமத்தில் தனியார் தொண்டு நிறுவன குழந்தைகள் இல்ல காப்பகம் அமைந்துள்ளது. இங்கு தேனி மாவட்டம் பல்லவராயன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முனீஸ்வரி (28) குழந்தைகள் பராமரிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் பணிபுரியும் காப்பக விடுதியில் தங்கி பயின்று வரும் ஆண்டிபட்டியைச் சேர்ந்த 10 வயது சிறுவன், 5ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுவனுக்கு முனீஸ்வரி இரவில் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

பாலியல் தொல்லை வழக்கில் கைதான பெண்
பாலியல் தொல்லை வழக்கில் கைதான பெண்

ஒரு காலகட்டத்தில் இந்த சிறுவன் அந்த காப்பகத்தில் இருந்து போடிநாயக்கனூர் சில்லமரத்துப்பட்டி அருகே உள்ள மற்றொரு தனியார் தொண்டு நிறுவன காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு பள்ளி சிறுவன் மனரீதியாக பாதிப்புகளுடன் உடல் சோர்வாக காணப்பட்டுள்ளார். இதுகுறித்து காப்பக விடுதி பராமரிப்பாளர்கள் கேட்டபோது, தான் முதலில் தங்கி இருந்த விடுதியில் முனீஸ்வரி தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது கூறியதாக தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து விடுதி நிர்வாகத்தினர் தேனி குழந்தைகள் நல அலுவலர் விஜயலட்சுமியிடம் தகவல் அளித்தனர்.

போடி காவல் நிலையம்
போடி காவல் நிலையம்

இதையடுத்து சிறுவன் மற்றும் முனீஸ்வரியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் பாலியல் தொந்தரவு அளித்தது உறுதியானதை அடுத்து முனீஸ்வரி மீது போடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, முனீஸ்வரியை கைது செய்தனர். 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 28 வயது இளம்பெண் கைதான சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பயணம் தொடங்கியது... ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலி இன்று புறப்படுகிறார் மோடி!

இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டியில் பரபரப்பு... 23 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்!

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 ஆக உயர்வு... 41 பேர் இந்தியர்கள்!

அதிர்ச்சி வீடியோ... பெட்ரோல் நிரப்பும் போது செல்போன் பயன்பாடு: தீப்பிடித்ததால் அலறிய வாகன ஓட்டி!

இரண்டாவது திருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சீரியல் நடிகை... ரசிகர்கள் வாழ்த்து!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in