பேருந்து நிலையத்தில் ஓடஓட பெண் குத்திக்கொலை... போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!

உயிரிழந்த சுமதி (42)
உயிரிழந்த சுமதி (42)BG
Updated on
2 min read

திருச்சி அருகே கள்ளக்காதல் தொடர்பை துண்டித்துக் கொண்ட ஆத்திரத்தில், பேருந்து நிலையத்தில் வைத்து பெண்ணை விரட்டி விரட்டி குத்திக் கொலை செய்த வாலிபரை கைது செய்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள சிறுகாம்பூர் பேருந்து நிலையத்தில் இன்று காலை ஏராளமான பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது ஒரு பெண்ணுக்கும், இளைஞருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த பெண்ணை சரமாரியாக குத்தியுள்ளார். உயிருக்கு பயந்து அந்த பெண் ஓட முயற்சித்த போது, அந்த வாலிபர் விடாமல் துரத்திச் சென்று அந்த பெண்ணை கத்தியால் குத்தியுள்ளார்.

சுமதியின் வீட்டில் குவிந்துள்ள உறவினர்கள்
சுமதியின் வீட்டில் குவிந்துள்ள உறவினர்கள்

இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அந்த பெண்ணை, அருகில் உள்ளவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பெண்ணை கத்தியால் குத்திய நபரையும் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இதனிடையே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த பெண் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வாத்தலை போலீஸார் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியானது.

கொலையாளிடம் வாத்தலை போலீஸார் விசாரணை
கொலையாளிடம் வாத்தலை போலீஸார் விசாரணை

சிறுகாம்பூர் பகுதியைச் சேர்ந்த சலவைத் தொழிலாளியான ரவிக்குமார் என்பவரது மனைவி சுமதி (42). கடந்த சில மாதங்களாக ரவிக்குமார் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால், அவரது மனைவி சுமதி திருச்சியில் உள்ள ஒரு ஜவுளிக் கடைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது மாரிமுத்து (30) என்பவருடன் சுமதிக்கு செல்போன் மூலமாக தொடர்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் திருமணம் மீறிய உறவாக மாறியதை அடுத்து, சுமதியும், மாரிமுத்துவும் பல்வேறு இடங்களுக்கும் சுற்றித்திரிந்து உள்ளனர். இது தொடர்பாக சுமதியின் உறவினர்களுக்கு தெரிய வந்ததால், அவர்கள் சுமதியை கடுமையாக கண்டித்துள்ளனர்.

இதையடுத்து மாரிமுத்து உடனான தொடர்பை துண்டித்துக் கொள்ள முடிவு செய்த சுமதி, இது தொடர்பாக அவரிடம் கூறிவிட்டு, அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். மேலும் மாரிமுத்துவின் செல்போன் அழைப்புகளையும் அவர் ஏற்க மறுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த மாரிமுத்து, இன்று காலை அவர் வழக்கமாக வரும் பேருந்து நிலையத்திற்கு வந்து காத்திருந்து, சுமதி உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுமதியை கொலை செய்துவிட்டு தப்பிச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து மாரிமுத்துவை கைது செய்துள்ள போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் திருச்சியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

திருநங்கைகளுக்கு அனைத்து அரசு பணிகளிலும் 1 சதவீத இடஒதுக்கீடு... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி பயங்கர விபத்து... 4 பேர் பலி; பலர் படுகாயம்

சவுதி அரேபியாவில் கடும் வெப்பம்: ஹஜ் பயணம் சென்ற 19 யாத்ரீகர்கள் உயிரிழப்பு!

5 மாடுகளின் உயிரைப் பறித்த பரோட்டா... கொல்லம் அருகே பரிதாபம்!

நள்ளிரவில் அதிர்ச்சி... வீட்டு வசதி வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்ததால் பரபரப்பு: இளைஞர் படுகாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in