அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இணைவோம் என்று சொல்வதற்கு ஓ.பன்னீர் செல்வதற்கு எந்த ஒரு தார்மீக உரிமையும் இல்லை என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய முனுசாமி, “அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இணைவோம் என்று சொல்வதற்கு ஓ.பன்னீர்செல்வதற்கு எந்த ஒரு தார்மீக உரிமையும் இல்லை. அதிமுக பல்வேறு சோதனைகளை சந்தித்தபோது, அதற்கு முக்கிய கருவியாக இருந்து அதிமுகவிற்கு மேலும் மேலும் சோதனைகளை கொடுத்தவர் ஓ.பன்னீர்செல்வம். அதிமுக தொண்டர்கள் கோயிலாக வணங்கும் அதிமுக தலைமை கழக அலுவலகத்தை குண்டர்கள் உதவியோடு சூறையாடிச் சென்றவர் ஓ.பன்னீர்செல்வம்” என்றார்.
மேலும், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்த அண்ணாமலையோடு, கைகோர்த்துக் கொண்டார். தன் சுயநலத்திற்காக அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டவர் தான் ஓ.பன்னீர்செல்வம். அதிமுக கட்சியை முடக்க முயற்சித்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு, அனைவரும் ஒன்றிணைவோம் வா என அழைப்பு விடுப்பதற்கு எந்த ஒரு அருகதையும் இல்லை” என்றார்.
மக்களவைத் தேர்தல் தோல்வியை அடுத்து, அதிமுகவினர் அனைவரும் மனமாட்சியங்கள் கடந்து ஒன்றிணைய வேண்டும் என ஓபிஎஸ் பேசியிருந்த நிலையில், முனுசாமி அவருக்கு காட்டமாக பதிலளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
ஒரே நாளில் தங்கம் விலை ஒரே சவரனுக்கு ரூ.600 உயர்வு... மக்கள் அதிர்ச்சி!
டிரக்கிங் சென்ற கர்நாடகாவை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு!
கடனைத் திருப்பிக் கேட்ட பெண் கொன்று புதைப்பு... 20,000 ரூபாய்க்காக கொடூரம்!
மத்திய அமைச்சர் ஆகிறாரா எச்.டி. குமாரசாமி? குறி வைக்கும் முக்கிய இலாகா!
வைகாசி மாத அமாவாசை... ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்