ஆன்லைனில் கடன் தருவதாக ரூ.40,000 மோசடி... குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற நபர்; மகள் பரிதாப மரணம்

உயிரிழந்த சிறுமி வின்ஸிலினுடன் தாய் விஜி
உயிரிழந்த சிறுமி வின்ஸிலினுடன் தாய் விஜி
Updated on
2 min read

திருப்பூர் அருகே ஆன்லைன் மோசடியில் நண்பர்களிடம் வாங்கிய 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்ததால், குடும்பத்துடன் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பலனின்றி 6 வயது வயது குழந்தை பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரடிவாவி பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ். இவரது மனைவி விஜி. இவர்களுக்கு வின்சிலின் என்ற 6 வயது குழந்தை உள்ளது. ராஜீவ் தனியார் நூல் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த வாரம் சமூக வலைதளத்தில் கடன் கொடுப்பதாக வந்த லிங்கை ராஜீவ் பதிவிறக்கம் செய்துள்ளார்.

உடனே அவரை தொடர்பு கொண்ட நபர்கள் 2 லட்ச ரூபாய் வரை கடன் வழங்க தயாராக இருப்பதாகவும், அதற்கான ஆவண செலவு இருப்பதாக கூறி 40 ஆயிரம் ரூபாய் வரை பணம் பெற்றுள்ளனர். 40 ஆயிரம் ரூபாய் பணத்தை ராஜீவ் தனது நண்பர்களிடம் கடனாக பெற்று ஆவண செலவுக்கு வழங்கி உள்ளார்.

ஆன்லைன் மோசடி
ஆன்லைன் மோசடி

ஆனால் சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்ட நபர் கூறியபடி லோன் பெற்று தரவில்லை. பிறகு அவரது தொடர்பும் துண்டிக்கப்பட்டது. இதனால் ராஜீவ் மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் 40 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்த நண்பர்கள் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான ராஜீவ், நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் எலிமருந்தை உட்கொண்டுள்ளார். பிறகு கரடிவாவி பேருந்து நிலையம் அருகே குடும்பத்துடன் நின்று கொண்டிருந்தபோது, 6 வயது சிறுமி வின்சிலின் வாந்தி எடுத்ததைக் கண்டு அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர்.

திருப்பூர் அரசு மருத்துவமனை
திருப்பூர் அரசு மருத்துவமனை

உடனடியாக மூவரும் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்த காமநாயக்கன்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் 6 வயது சிறுமி வின்சிலின் சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார். ராஜீவ் மற்றும் விஜி ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

வேளாங்கண்ணி மாதாவிற்கு தங்ககிரீடம் அணியும் நிகழ்ச்சி... மனமுருக கிறிஸ்துவர்கள் பிரார்த்தனை!

விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்து வரும் பிரதமர் மோடி: வெளியானது புது வீடியோ

சாவர்க்கர் குறித்து அவதூறு: ராகுல் காந்தி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

பெங்களூரு விமான நிலையத்தில் தட்டித் தூக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா... அதிரடி காட்டிய எஸ்ஐடி!

வரலாறு காணாத வெப்பம்... 19 பேர் சாவு: மருத்துவமனையில் 40 பேர் அனுமதி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in