மகா சிவராத்திரி : நான்கு கால பூஜைகளும், தரிசிப்பதன் பலன்களும்!  வில்வாஷ்டகம் சொல்ல மறக்காதீங்க!

மகா சிவராத்திரி : நான்கு கால பூஜைகளும், தரிசிப்பதன் பலன்களும்! வில்வாஷ்டகம் சொல்ல மறக்காதீங்க!

இன்று மகா சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் நான்கு கால பூஜைகளையும், அபிஷேகங்களையும் தரிசிக்க தவறாதீங்க. விரதங்களிலேயே மிக மிக எளிமையான விரதம் மகா சிவராத்திரி விரதம். மகா சிவராத்திரியன்று நீராடி அருகில் உள்ள சிவாலயத்திற்குச் சென்று ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு, ‘சிவ சிவ’ என்று கண்களை மூடியபடி ஜபித்துக் கொண்டிருந்தாலே போதும். அதேபோல், ‘நமசிவாய’ என்று ஜபித்துக்கொண்டிருந்தாலே புண்ணியம் சேரும்!

மகா சிவராத்திரி நாளில், நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருக்க வேண்டும். அன்று முழுவதும் திட உணவைத் தவிர்க்க வேண்டும். திரவ வடிவிலான உணவு எடுத்துக் கொள்ளலாம். உடல்நிலை சரியில்லாதவர்கள், வயதானவர்கள் பழங்கள் சாப்பிடலாம்.

மகா சிவராத்திரி அன்று இரவு நடைபெறும் நான்கு கால பூஜையில் கலந்து கொள்வது உத்தமம். அர்த்தஜாம பூஜை முடிந்ததும் வீட்டிற்கு வந்து நீராடி அதிகாலை மீண்டும் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும். பின்னர் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்யவேண்டும்.

இந்த எளிய விரதத்தை தொடர்ந்து கடைபிடிப்போருக்கு வாழும் காலத்தில் செல்வ வளமும் பிறப்பற்ற நிலையும் கிடைக்கும்.

மகா சிவராத்திரி நாளில், சிவபெருமானுக்கு நான்கு கால பூஜைகள் இரவில் நடைபெறுவது வழக்கம். இரவு 9 மணிக்குள் நடைபெறும் முதல் கால பூஜையானது, சிவபெருமானுக்கு ஸ்ரீபிரம்மா செய்யும் பூஜை. அப்போது, சிறப்பு அபிஷேகம் நடைபெறும். தாமரை மலர்களாலும் வில்வத்தாலும் அர்ச்சனை செய்யப்படும். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, பிரம்மாவுக்கு உகந்த மஞ்சள் வஸ்திரத்தை சிவலிங்கத்துக்கு சார்த்தி வழிபடுவார்கள். இந்த பூஜையில் கலந்துகொண்டு சிவ தரிசனம் செய்தால், நம் தலையெழுத்தை சிவனும், பிரம்மாவும் திருத்தி அருளுவார்கள் என்பது ஐதீகம்.

நள்ளிரவு 12 மணிக்கு இரண்டாம் கால பூஜை நடைபெறும். சிவபெருமானுக்கு, ஸ்ரீமகாவிஷ்ணு செய்யும் பூஜை இது. அப்போது, சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, வில்வத்தாலும் துளசியாலும் அர்ச்சனை செய்யப்படும். அரளிப்பூ கொண்டும் அர்ச்சனை செய்து பூஜிப்பார்கள். சந்தனக்காப்பு அலங்காரம் செய்வது வழக்கம். இதில் சிவனார் மனம் குளிர்ந்து, தன்னைத் தரிசிக்க வந்தவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் முக்கியமாக சந்ததியினருக்கும் பேரருள் புரிந்து காத்தருளுவார். இரண்டாம் கால பூஜையில், சிவனாருக்கு பஞ்சாமிர்த நைவேத்தியம் படைப்பார்கள். வெண்மை நிற ஆடையை அணிவித்து பூஜை செய்வார்கள். இந்த பூஜையை தரிசித்தால், சிவபெருமாளின் அருளும் மகாவிஷ்ணுவின் அருளும் கிடைக்கப் பெறலாம். வில்வத்தில் மகாலட்சுமி குடிகொண்டிருக்கிறாள் என்பதாக ஐதீகம்.

அதன் பிறகு அதிகாலை 3 மணிக்கு மூன்றாம் கால பூஜை நடைபெறும். சக்தியாகத் திகழும் உமையவளே தன் கணவரான உமையொருபாகனுக்கு இந்த பூஜையைச் செய்து வழிபடுவதாக ஐதீகம். அப்போது தேன் முதலானவை கொண்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அம்பாளுக்கு உகந்த செந்நிற ஆடையை சிவத்திருமேனிக்கு அணிவிப்பார்கள். மல்லிகை முதலான வெண்மை நிற மலர்களும் வில்வமும் சூட்டி வழிபடுவார்கள். பிட்டு நைவேத்தியம் படைப்பது சிறப்பு. மூன்றாம் கால பூஜையை தரிசித்தால், தரித்திரம் விலகும்., தம்பதி ஒற்றுமை மேலோங்கும். கருத்துவேற்றுமையால் பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள்.

இதையடுத்து, அதிகாலை 5 மணிக்கு நான்காம் கால பூஜை நடைபெறும். சிவனாருக்குச் செய்யப்படும் இந்த பூஜையை, முப்பத்து முக்கோடி தேவர்களும் முனிவர்களும் மகான்களும் மக்களுமாக சேர்ந்து செய்கிறார்கள் என சிவாகமம் தெரிவிக்கிறது. அப்போது, சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். வெண்மை நிற ஆடைகள் அணிவித்து, பல நிறங்கள் கொண்ட பூக்களாலும் வில்வத்தாலும் அர்ச்சித்து வழிபடுவது வழக்கம். அதேபோல், கனிகளைக் கொண்டு சிவலிங்கத் திருமேனிக்கு அலங்காரம் செய்வதும் நடைபெறும். வெல்லம் மற்றும் வெல்லம் கொண்டு செய்யப்படும் உணவால் நைவேத்தியம் படைப்பது வழக்கம்.

அதேபோல், இன்று பிரதோஷமும், மகா சிவராத்திரியும் சேர்ந்தே வருகிறது. இன்று வில்வாஷ்டகம் பாராயணம் செய்ய மறக்காதீங்க.

வில்வாஷ்டகம்:

த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரினேத்ரம் ச த்ரியாயுதம்

த்ரிஜன்ம பாபஸம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

த்ரிசா கைஃ பில்வபத்ரைச்ச அச்சித்ரைஃ கோமலை ஸுபை:

தவபூஜாம் கரிஷ்யாமி ஏக வில்வம் சிவார்ப்பணம்

கோடி கன்யா மஹாதானம் திலபர்வத கோடய:

காம்சனம் க்ஷீலதானேன ஏக வில்வம் சிவார்ப்பணம்

காசி க்ஷேத்ர நிவாஸம் ச காலபைரவ தர்சனம்

ப்ரயாகே மாதவம் த்ரூஷ்ட்வா ஏக வில்வம் சிவார்ப்பணம்

இம்துவாரே வ்ரதம் ஸ்தித்வா நிராஹாரோ மஹேஷ்வரா

நிக்தம் ஹௌஷ்யாமி தேவே ஏக வில்வம் சிவார்ப்பணம்

ராமலிம்க ப்ரதிஷ்டா ச வைவாஹிக க்றுதம் ததா

தடாகானிச ஸம்தானம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

அகம்ட பில்வபத்ரம் ச ஆயுதம் சிவபூஜனம்

க்றுதம் னாம ஸஹஸ்ரேண ஏக வில்வம் சிவார்ப்பணம்

உமயா ஸஹதேவேச நந்தி வாஹனமேவ ச

பஸ்மலேபன ஸர்வாங்கம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

ஸாலக்ராமேஷு விப்ராணாம் தடாகம் தசகூபயோ:

யஜ்னகோடி ஸஹஸ்ரஸ்ச ஏக வில்வம் சிவார்ப்பணம்

தம்தி கோடி ஸஹஸ்ரேஷு அஸ்வமேத சதக்ரதௌ

கோடிகன்யா மஹாதானம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

பில்வாணாம் தர்சனம் புண்யம் ஸ்பர்சனம் பாபனாசனம்

அகோர பாபஸம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

ஸஹஸ்ரவேத பாடேஷு ப்ரஹ்மஸ்தாபன முச்யதே

அனேகவ்ரத கோடீனாம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

அன்னதான ஸஹஸ்ரேஷு ஸஹஸ்ரோப நயனம் ததா

அனேக ஜன்மபாபானி ஏக வில்வம் சிவார்ப்பணம்

பில்வஸ்தோத்ரமிதம் புண்யம் ய படேத் சிவ ஸன்னிதௌ

சிவலோகமவாப்னோதி சிவேன சஹ மொததே

இதையும் வாசிக்கலாமே...  

எரிவாயு சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைப்பு... தேசிய மகளிர் தினத்தில் பிரதமர் மோடி அசத்தல் அறிவிப்பு

பகீர்... துண்டு துண்டாக வெட்டி வாலிபர் படுகொலை: சென்னையில் ரவுடிகள் 2 பேர் கைது!

சிக்கலில் திமுக... உதயநிதியை வளைக்கும் வியூகத்தில் மத்திய சக்திகள்?

ஷாக்... இலங்கையைச் சேர்ந்த 4 குழந்தைகள், தாய் உள்பட 6 பேர் குத்திக்கொலை: கனடாவில் பயங்கரம்!

ஒரே நாளில் வேட்பாளர் நேர்காணலை துவங்கும் திமுக, அதிமுக... முதல் பட்டியலை வெளியிடப்போவது யார்?

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in