ரூ.340 கோடி மதிப்பில் ரொக்கம், மதுபானம், தங்கம் பறிமுதல்… தேர்தல் ஆணையம் அதிரடி!

ரூ.340 கோடி மதிப்பில் ரொக்கம், மதுபானம், தங்கம் பறிமுதல்… தேர்தல் ஆணையம் அதிரடி!

மத்தியப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் ஆணையம் ரூ.340 கோடி மதிப்பில் ரொக்கம், மதுபானம் உள்ளிட்டவற்றை தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்த போது பறிமுதல் செய்துள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள 230 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 71.16 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய சட்டமன்ற தேர்தல் என்பதால் நாடு முழுவதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பணம்
பணம்

மத்தியப்பிரதேச மாநிலத்தில் கடந்த அக்டோபர் 3-ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட பணம், நகை, மதுபானம் உள்ளிட்டவற்றை சோதனையின்போது அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அந்த வகையில் அக்டோபர் 9 முதல் நவம்பர் 16 வரை பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பு குழுவினர் இணைந்து நடத்திய சோதனைகளில், மொத்தம் ரூ.339.95 கோடி மதிப்பிலான ரொக்கம், மதுபானம், தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 ரூ.40.18 கோடி ரொக்கம், ரூ.65.56 கோடி மதிப்பிலான மதுபானம், ரூ.17.25 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி, ரூ.92.76 கோடி மதிப்பிலான அரிய வகை உலோகங்கள், ரூ.124.18 கோடி மதிப்பிலான விலையுயர்ந்த பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in