எலான் மஸ்க் தலைமையிலான எக்ஸ் சமூக வலைதளம் நிறுவனம், கடந்த ஒரு மாதத்தில் இந்தியாவில் விதிகளை மீறிய 2,12,627 கணக்குகளை தடை செய்துள்ளது.
இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல், நிர்வாணம் போன்ற உள்ளடக்கத்தை கொண்ட 2,12,627 கணக்குகளை தடை செய்துள்ளது. நாட்டில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்காக செயல்பட்ட 1,235 கணக்குகளும் இதில் அடங்கும். இந்தியாவில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் இவ்வளவு கணக்குகள் மீது எக்ஸ் வலைதளம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல், பயங்கரவாதத்தை மட்டுப்படுத்துவது போன்றவை தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி உள்ளதாக எக்ஸ் தளம் தெரிவித்துள்ளது.
எக்ஸ் நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள மாதாந்திர அறிக்கையில், 'இந்தியாவில் உள்ள பயனர்களிடமிருந்து 5,158 புகார்கள், நிறுவனத்தின் குறை தீர்க்கும் வழிமுறைகள் பிரிவின் கீழ் பெறப்பட்டது. அவற்றில் தடையிலிருந்து தப்பித்தல் பிரிவில் 3,074 புகார்கள், வயது வந்தோருக்கான கன்டென்ட் தொடர்பாக 953 புகார்கள், வெறுக்கத்தக்க நடத்தை தொடர்பாக 412 புகார்கள், துஷ்பிரயோகம் அல்லது துன்புறுத்தல் தொடர்பாக 359 புகார்கள் வரப்பெற்றன.
மேலும், தடை செய்யப்பட்ட கணக்குகளை, செயல்பாட்டுக்கு கொண்டுவரக் கோரி 86 மேல் முறையீடுகள் வரப்பெற்றன. இதனை மதிப்பாய்வு செய்து, 7 கணக்குகள் மீதான தடை நடவடிக்கை நீக்கப்பட்டது. மற்ற கணக்குகள் மீதான தடை தொடரும். இவை தவிர பொதுவான கோரிக்கைகள் தொடர்பாக 29 கோரிக்கைகள் வரப் பெற்றுள்ளன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அடேங்கப்பா ரூ.4,650 கோடி பறிமுதல்... முதற்கட்ட தேர்தலுக்கு முன்பே அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்!
அதிர்ச்சி... அம்பேத்கர் ஜெயந்தி ஊர்வலத்தில் பங்கேற்ற இளைஞர் வெட்டிக்கொலை!
ஒபாமாவே அஞ்சு வருஷம் தான்... இடத்தை காலி பண்ணுங்க மோடி... முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ஆவேசம்!