வாக்களிக்க ஆண்களை காட்டிலும் பெண்கள் அதிக ஆர்வம்!

அசாமில் வாக்களிக்க வரிசையில் நிற்கும் பெண்கள்
அசாமில் வாக்களிக்க வரிசையில் நிற்கும் பெண்கள்

முதல் கட்ட தேர்தலில்அசாமில் உள்ள 5 மக்களவைத் தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்களை காட்டிலும் பெண்கள் அதிகளவில் வாக்களிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. மொத்தம் 21 மாநிலங்கள் மற்றும் 102 தொகுதிகள் இன்று வாக்குப்பதிவை எதிர்கொள்கின்றன. வடகிழக்கு மாநிலமான அசாமில் திப்ரூகர், ஜோர்ஹாட், காசிரங்கா, லக்கிம்பூர், சோனித்பூர் ஆகிய 5 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.

இந்த 5 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் அம்மாநிலத்தில் ஆண்களை காட்டிலும் பெண்கள் வாக்களிக்க அதிக ஆர்வம் காட்டி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று அதிகாலை 5 மணி முதலே ஏராளமான பெண்கள் வாக்குச் சாவடிகள் முன்பு வரிசையில் நின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் வீடு திரும்பியதும் தங்கள் அன்றாட வேலைகளைத் தொடர்வதற்காக முன்கூட்டியே வாக்களிக்க வந்ததாக கூறினர்.

அசாமில் வாக்களிக்க வரிசையில் நிற்கும் பெண்கள்
அசாமில் வாக்களிக்க வரிசையில் நிற்கும் பெண்கள்

அசாம் மாநிலத்தில் 5 மக்களவைத் தொகுதிகளில் மொத்த பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 43,64,859 ஆக உள்ளது. ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 42,82,887. மூன்றாம் பாலினத்தவர்கள் 123 பேர் உள்ளனர். இத்தேர்தலில் அசாமில் 4 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இது மொத்தம் உள்ள 35 வேட்பாளர்களில் 11.4 சதவீதம் ஆகும்.

இதையும் வாசிக்கலாமே...

வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in